Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபரால் மெரினாவில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா சதுக்கத்தில் உள்ள நேப்பியர் பாலம் வழியாக செல்லும் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடம் அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். திடீரென கூவத்தின் உள்ளே இறங்க ஆரம்பித்தவர் ஆழமான பகுதிக்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் சென்றார். பின்னர், அங்கிருந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் இரண்டு குழுவாக பிரிந்து ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றனர். பின்னர், வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவர் கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், தனது பெயரை சத்தியராஜ், சத்திய கமல் என்று மாற்றி மாற்றி கூறினார். அதன் பிறகுதான் தெரிந்தது கூவத்தில் நீந்தியவர் மனநிலை பாதித்த வாலிபர் என்று. அதன்பிறகு சாப்பாடு வாங்கி கொடுத்து அவரை போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: