Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
ஆலந்தூர், : ஆலந்தூர் புதுப்பேட்டை தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணியை சேர்ந்த லோகேஷ் என்பவரின் தம்பிக்கு நேற்று திருமணம் நடந்தது. அமைச்சர் சின்னையா, வெங்கட்ராமன் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் பரிமளா நந்தகுமார் ஆகியோரை வரவேற்று ஆலந்தூர் எம்.கே.என் சாலை போலீஸ் பூத் அருகிலும், புதுப்பேட்டை திருமண மண்டபம் பகுதியிலும் பேனர் வைத்திருந்தனர். அதில் முதல்வர் ஜெயலலிதா படம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கும்பல் அந்த பேனரை கிழித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பரங்கிமலை போலீசில் லோகேஷ் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேனரில் அதே பகுதியை சேர்ந்த சிலரின் பெயர் இடம் பெறாததால் ஆத்திரம் அடைந்த சிலர் கிழித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் வேறு ஏதாவது காரணத்திற்காக பேனர் கிழிக்கப்பட்டதா எனவும் விசாரணை நடக்கிறது.

0 comments: