Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
தாம்பரம், : பின்னால் வந்த மணல் லாரி மோதியதில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக பலியானார். நண்பர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.
குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர்கள் தேவா (எ) தேவேந்திரன் (19), சிவபிரகாசம் (20), வினோத் (20). கூலி தொழிலாளர்கள்.
நேற்று முன்தினம் மூவரும் ஒரே பைக்கில் கூடுவாஞ்சேரி சென்றுள்ளனர். அங்கு நண்பரை சந்தித்துவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தாம்பரம் காந்தி ரோடு சிக்னல் அருகே வந்தபோது, பின்னால் வந்த மணல் லாரி, பைக் மீது வேகமாக மோதியது. 
இதில் சம்பவ இடத்திலேயே தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வினோத், சிவபிரகாசம் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீ சார், மணல் லாரி டிரைவர் பாலுவை (37) கைது செய்து விசாரிக்கின்றனர்.

0 comments: