Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
ஆவடி, : கொரட்டூர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (43). இவர், நேற்று முன்தினம் இரவு வாக்கிங் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்மநபர், ஸ்ரீவித்யாவை வழிமறித்து, அவரது கழுத்தில் கிடந்த 8 சவரன் நகையை பறித்து கொண்டு தப்ப முயன்றார். அவர் சத்தம் போட்டதில், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த ஆசாமியை விரட்டி பிடித்து, தர்மஅடி கொடுத்து கொரட்டூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், வானவில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஜான் என்ற லிட்டில் ஜான் (38) என தெரிந்தது. 
அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

0 comments: