Saturday, September 20, 2014
வையம்பட்டி பகுதியில் குடிநீர் வசதி கோரி காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
வையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.வையம்பட்டி மற்றும் கருப்பரெட்டியபட்டி காலனி ஆகிய பகுதிகளில் சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலி குடங்களுடன் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோகன், மரியபிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
முற்றுகை முயற்சி
இதே போல் கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெஸ்டோ நகர் பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி அப்பகுதி மக்கள் நேற்று மதியம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.இது பற்றி அறிந்த ஆணையர் லதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்று கூறினார். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவங்களால் மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
வையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.வையம்பட்டி மற்றும் கருப்பரெட்டியபட்டி காலனி ஆகிய பகுதிகளில் சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலி குடங்களுடன் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோகன், மரியபிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
முற்றுகை முயற்சி
இதே போல் கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெஸ்டோ நகர் பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி அப்பகுதி மக்கள் நேற்று மதியம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.இது பற்றி அறிந்த ஆணையர் லதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்று கூறினார். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவங்களால் மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment