Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருவண்ணாமலை மாவட்டத்தில் உண்மை யான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண் டும் என்று குறைதீர்வு கூட்டத் தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறை தீர்வுநாள் கூட்டம் கலெக்டர் அ.ஞானசேகரன் தலைமை யில் நேற்று கலெக்டர் அலுவ லக கூட்டரங்கில் நடை பெற் றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி மற்றும் அனைத்துத்துறை அதிகாரி கள் கலந்து கொண் டனர்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். விவசாயிகள் பேசியதாவது:-

நீர்மட்டம் குறைவு

திருவண்ணாமலை மாவட் டத்தில் வறட்சியின் காரண மாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. காற்றின் ஈரப்பதமும் குறைந்து விட்டது. எனவே திருவண் ணாமலை மாவட்டத்தை கறுப்பு பட்டியலில் சேர்த்துள் ளனர்.

நாங்கள் உழைப்பதற்கு தயா ராக இருக்கிறோம். அதற்கு மாவட்ட நிர்வாகம் எங்க ளுக்கு பயிர்காப்பீடு திட்டம், இன்சூரன்சில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். அதற்கு வங்கியா ளர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

வறட்சி நிவாரணம்

கிணற்று பாசனத்தை பொறுத்தவரை திருவண்ணா மலை மாவட்டம்தான் மக சூலில் முன்னணியில் இருக்கி றது. கரும்புக்கு தேவையான உரங்கள், சொட்டு நீர் பாசனம் ஆகியவற்றை கணக்கெடுத்து வழங்க வேண்டும்.

கலசபாக்கம் தாலுகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பசுமைவீடு வழங்கப் பட்டுள்ளது. இதுகுறித்து விசா ரணை நடத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட் டத்தில் வறட்சியின் காரண மாக விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். வருவாய்த் துறை, வேளாண்மைத்துறை, புள்ளியியல்துறை சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப் பில் வேறுபாடுகள் உள்ளன.

எனவே உண்மையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

முன்னுரிமை

தண்டராம்பட்டு பகுதியில் விவசாய நிலங்களுக்குள் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வரு கின்றன. அதற்கு வனத்துறை வழங்கும் இழப்பீடு போது மானதாக இல்லை. எனவே வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க பள்ளம் தோண்ட வேண்டும்.

ஏரி நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள் ளதை சரிசெய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கை களை ஆராய்ந்து முக்கியமான கோரிக்கைகளுக்கு முன்னு ரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு விவசாயி கள் வலியுறுத்தினர்.

0 comments: