Showing posts with label திருவண்ணாமலை. Show all posts
Showing posts with label திருவண்ணாமலை. Show all posts

Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருவண்ணாமலை மாவட்டத்தில் உண்மை யான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண் டும் என்று குறைதீர்வு கூட்டத் தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறை தீர்வுநாள் கூட்டம் கலெக்டர் அ.ஞானசேகரன் தலைமை யில் நேற்று கலெக்டர் அலுவ லக கூட்டரங்கில் நடை பெற் றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி மற்றும் அனைத்துத்துறை அதிகாரி கள் கலந்து கொண் டனர்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். விவசாயிகள் பேசியதாவது:-

நீர்மட்டம் குறைவு

திருவண்ணாமலை மாவட் டத்தில் வறட்சியின் காரண மாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. காற்றின் ஈரப்பதமும் குறைந்து விட்டது. எனவே திருவண் ணாமலை மாவட்டத்தை கறுப்பு பட்டியலில் சேர்த்துள் ளனர்.

நாங்கள் உழைப்பதற்கு தயா ராக இருக்கிறோம். அதற்கு மாவட்ட நிர்வாகம் எங்க ளுக்கு பயிர்காப்பீடு திட்டம், இன்சூரன்சில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். அதற்கு வங்கியா ளர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

வறட்சி நிவாரணம்

கிணற்று பாசனத்தை பொறுத்தவரை திருவண்ணா மலை மாவட்டம்தான் மக சூலில் முன்னணியில் இருக்கி றது. கரும்புக்கு தேவையான உரங்கள், சொட்டு நீர் பாசனம் ஆகியவற்றை கணக்கெடுத்து வழங்க வேண்டும்.

கலசபாக்கம் தாலுகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பசுமைவீடு வழங்கப் பட்டுள்ளது. இதுகுறித்து விசா ரணை நடத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட் டத்தில் வறட்சியின் காரண மாக விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். வருவாய்த் துறை, வேளாண்மைத்துறை, புள்ளியியல்துறை சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப் பில் வேறுபாடுகள் உள்ளன.

எனவே உண்மையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

முன்னுரிமை

தண்டராம்பட்டு பகுதியில் விவசாய நிலங்களுக்குள் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வரு கின்றன. அதற்கு வனத்துறை வழங்கும் இழப்பீடு போது மானதாக இல்லை. எனவே வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க பள்ளம் தோண்ட வேண்டும்.

ஏரி நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள் ளதை சரிசெய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கை களை ஆராய்ந்து முக்கியமான கோரிக்கைகளுக்கு முன்னு ரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு விவசாயி கள் வலியுறுத்தினர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
போளூர் அருகே மாயமான டிராக்டர் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அவருடைய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிராக்டர் டிரைவர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கீழ்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 38). இவரது மனைவி சாந்தி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஏழுமலை அதே கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் மகன் பரசுராமனிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பரசுராமனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

திடீர் மாயம்

இந்த நிலையில், பரசுராமனிடம் வேலை பார்த்து வந்த ஏழுமலையை கடந்த 19-7-2014 அன்று முதல் காணவில்லை. இது குறித்து அவருடைய தாய் தனம் போளூர் போலீசில் 25-7-2014 அன்று புகார் செய்தார். அதில் தனது மகனை காணவில்லை என்றும், கண்டு பிடித்து தருமாறும் கூறியிருந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். ஆனால் ஏழுமலை என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்து வந்தது.

கள்ளக்காதல் ஜோடி சரண்

இந்த நிலையில், ஏழுமலையின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை காணாமல்போன ஏழுமலையின் மனைவி சாந்தி, பரசுராமன் ஆகிய இருவரும் கிராமநிர்வாக அலுவலர் கண்ணகி முன்பு சரண் அடைந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து ஏழுமலையை கொலைசெய்ததாக தெரிவித்தனர். அதனால் அவர்கள் போளூர் போலீசில் ஒப்படைக் கப்பட்டனர்.

அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இடைஞ்சலாக இருந்தார்

ஏழுமலை, பரசுராமனிடம் வேலைபார்த்ததால் ஏழுமலை வீட்டிற்கு பரசுராமன் அடிக்கடி சென்றுவந்துள்ளார். அப்போது சாந்திக்கும், பரசுராமனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இதற்கு ஏழுமலை இடைஞ்சலாக இருந்துள்ளார். இதனால் அவரை கள்ளக்காதல் ஜோடி கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி கடந்த 19-7-2014 அன்று இரவு ஊரில் நாடகம் நடந்துள்ளது. அப்போது ஏழுமலை தனது நிலத்துக்கு சென்றுள்ளார்.

கொன்று புதைப்பு

இதை அறிந்த சாந்தியும், கள்ளக்காதலன் பரசுராமனும் அங்கு கடப்பாரையுடன் சென்று ஏழுமலையின் தலையில் கடப்பாரை கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் கொலை செய் தது தொரியாமல் இருக்க அங்கேயே குழி தோண்டி புதைத்துவிட்டு எதுவும் தெரியாதது போன்று வீடுக்கு வந்துவிட்டனர்.

தற்போது போலீஸ் விசாரணை தீவிரமடைந்ததை தொடர்ந்து பயந்து போய் இருவரும் சரண் அடைந்துள்ளனர்.

பிணம் தோண்டி எடுப்பு

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று மாலை தாசில்தார் கோபு, துணை சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் ஏழுமலையை புதைத்ததாக கூறப்பட்ட இடத்தில் தோண்டிப்பார்த்தனர்.

அங்கு ஏழுமலையின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் ராணி, பழனி ஆகியோர் அங்கேயே ஏழுமலையின் உடலை பிரேதபரிசோதனை செய்தனர்.

மேலும் சாந்தி, பரசுராமன் ஆகிய இருவரையும் கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மனைவியே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலைசெய்து புதைத்த இந்த சம்பவம் போளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
திருவண்ணாமலை அருகே விநாயகர் ஊர்வலத்தின்போது நடந்த தகராறில் ஒரு தரப்பினர் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்ப தாகக்கூறி நேற்று எம்.எல்.ஏ. வீட்டு முன்பு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள எரும் பூண்டி கிராமத்தில் விநா யகர் சதுர்த்தியை முன்னிட்டு விநா யகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வந்தனர்.
இந்த சிலைகளை அங்குள்ள குளத்தில் கரைப்பதற்கு கடந்த 31-ந் தேதி மாலை ஊர்வல மாக எடுத்து சென்றனர். அப் போது ஒரு தரப்பினர் விநாய கர் சிலைகளை அந்த வழியாக எடுத்து செல்ல எதிர்ப்பு தெரி வித்ததுடன், குளத்திலும் சிலைகளை கரைக்கக்கூடாது எனகூறினர்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 4 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் முத்துக்குமரசாமி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலைகளை கரைத் தனர்.
இதுபற்றி மங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் ஒரு தரப் பினருக்கு சாதகமாக செயல் படுவதாகக்கூறி நேற்று பொது மக்கள் திருவண்ணாமலை யில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு கூடி அவரிடம் முறையிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அரங்கநாதன் எம்.எல்.ஏ.சமாதானம் செய் தார். அதைத்தொடர்ந்து அனை வரும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து முறையிட்டனர்.
On Friday, September 05, 2014 by farook press in ,    
காஷ்மீரில் பலியான திருவண்ணாமலை ராணுவவீரர் உடல் ராணுவ மரியாதையு டன் 42 குண்டுகள் முழங்க அடக்கம் செய் யப்பட்டது.
ராணுவ வீரர்
திருவண்ணாமலை மாவட் டம் வெறையூர் அருகே உள்ள சு.கம்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராயர் முன்னாள் ராணுவவீரர். தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மகன் ரஞ்சித் (வயது25) இவர் கடந்த 2010–ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2–ந் தேதி தீவிரவாதிக ளுக்கும், இந்திய ராணுவத்துக் கும் இடையே நடந்த சண் டை யின்போது வீரர்களை மாற்று வதற்காக சென்றார்.
பின்னர் 8 வீரர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தார். வாகனத்தை ரஞ்சித் ஓட்டி வந்தார். சர்கோலி என்ற காட் டுப்பகுதியில் வந்த போது திடீர் என்று 200 அடி பள்ளத் தில் வாகனம் கவிழ்ந்தது. இதில் ரஞ்சித் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியா னார்கள். 2 பேர் ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு பலியா னார்கள்.
பலியான ரஞ்சித் உடல் நேற்று முன்தினம் தனிவிமா னம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அங்கி ருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று காலை ரஞ்சித்தின் சொந்தஊரான சு.கம்பம் பட்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. 40 ராணுவ வீரர்கள் உடன் வந்திருந்த னர்.
ராணுவ மரியாதையுடன் அடக்கம்
அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ரஞ்சித் உட லுக்கு அஞ்சலி செலுத்தினர். பினனர் ரஞ்சித் உடல் தேசிய கொடு போர்த்தப்பட்டு ஆம்பு லன்ஸ் மூலம் அடக்கம் செய் வதற்கு கொண்டு செல்லப்பட் டது.
அங்கு கலெக்டர் அ.ஞான சேகரன், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, சென்னை ரெஜி மென்ட் கேப்டன் சமர்சிங் தயாள், முன்னாள் படைவீரர் கள் நல உதவி இயக்குனர் பிரகாசம்ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து 42 குண்டுகள் முழங்க ரஞ்சித் உடல் அடக்கம் செய்யப்பட்டது.