Friday, September 05, 2014
காஷ்மீரில் பலியான திருவண்ணாமலை ராணுவவீரர் உடல் ராணுவ மரியாதையு டன் 42 குண்டுகள் முழங்க அடக்கம் செய் யப்பட்டது.
ராணுவ வீரர்
திருவண்ணாமலை மாவட் டம் வெறையூர் அருகே உள்ள சு.கம்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராயர் முன்னாள் ராணுவவீரர். தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மகன் ரஞ்சித் (வயது25) இவர் கடந்த 2010–ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2–ந் தேதி தீவிரவாதிக ளுக்கும், இந்திய ராணுவத்துக் கும் இடையே நடந்த சண் டை யின்போது வீரர்களை மாற்று வதற்காக சென்றார்.
பின்னர் 8 வீரர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தார். வாகனத்தை ரஞ்சித் ஓட்டி வந்தார். சர்கோலி என்ற காட் டுப்பகுதியில் வந்த போது திடீர் என்று 200 அடி பள்ளத் தில் வாகனம் கவிழ்ந்தது. இதில் ரஞ்சித் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியா னார்கள். 2 பேர் ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு பலியா னார்கள்.
பலியான ரஞ்சித் உடல் நேற்று முன்தினம் தனிவிமா னம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அங்கி ருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று காலை ரஞ்சித்தின் சொந்தஊரான சு.கம்பம் பட்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. 40 ராணுவ வீரர்கள் உடன் வந்திருந்த னர்.
ராணுவ மரியாதையுடன் அடக்கம்
அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ரஞ்சித் உட லுக்கு அஞ்சலி செலுத்தினர். பினனர் ரஞ்சித் உடல் தேசிய கொடு போர்த்தப்பட்டு ஆம்பு லன்ஸ் மூலம் அடக்கம் செய் வதற்கு கொண்டு செல்லப்பட் டது.
அங்கு கலெக்டர் அ.ஞான சேகரன், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, சென்னை ரெஜி மென்ட் கேப்டன் சமர்சிங் தயாள், முன்னாள் படைவீரர் கள் நல உதவி இயக்குனர் பிரகாசம்ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து 42 குண்டுகள் முழங்க ரஞ்சித் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment