Monday, September 15, 2014
பரமத்தி வேலூர் அருகே குடும்பத்தகராறில் மகன், மகளுடன் விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் முன்பு கிடந்த அவர்கள் 3 பேரின் பிணங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி டிரைவர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கொந்தளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் முனியப்பன் (வயது 35). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மகேஷ்வரி (28). இவர்களுக்கு நரேந்திரபிரசாத் (11) என்ற மகனும், கவுசிகா (10) என்ற மகளும் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ்வரி கொந்தளம் வெங்கமேடு பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது முனியப்பன் தனது மகன் நரேந்திரபிரசாத் மற்றும் மகள் கவுசிகா ஆகியோருடன் நண்பரது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
பிணங்களாக கிடந்தனர்
இந்த நிலையில் மகேஷ்வரி தந்தை வீட்டில் இருந்து நேற்று காலை தனது வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது வீட்டினுள் அமைக்கப்பட்டு இருந்த தென்னை கீற்று வேலி அருகே மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்ததையும், அந்த மோட்டார் சைக்கிளுக்கு கீழ் தனது மகன் நரேந்திரபிரசாத், மகள் கவுசிகா மற்றும் கணவர் முனியப்பன் ஆகியோர் பிணமாக கிடந்ததையும் பார்த்து மகேஷ்வரி கதறி அழுதார்.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெஸ்கி, பரமத்தி வேலூர் துணை சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விஷம் குடித்து தற்கொலை
பின்னர் இறந்து போன 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக லாரி டிரைவர் முனியப்பன் தன் குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர்களின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே குடும்பத்தில் தந்தை மற்றும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லாரி டிரைவர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கொந்தளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் முனியப்பன் (வயது 35). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மகேஷ்வரி (28). இவர்களுக்கு நரேந்திரபிரசாத் (11) என்ற மகனும், கவுசிகா (10) என்ற மகளும் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ்வரி கொந்தளம் வெங்கமேடு பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது முனியப்பன் தனது மகன் நரேந்திரபிரசாத் மற்றும் மகள் கவுசிகா ஆகியோருடன் நண்பரது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
பிணங்களாக கிடந்தனர்
இந்த நிலையில் மகேஷ்வரி தந்தை வீட்டில் இருந்து நேற்று காலை தனது வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது வீட்டினுள் அமைக்கப்பட்டு இருந்த தென்னை கீற்று வேலி அருகே மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்ததையும், அந்த மோட்டார் சைக்கிளுக்கு கீழ் தனது மகன் நரேந்திரபிரசாத், மகள் கவுசிகா மற்றும் கணவர் முனியப்பன் ஆகியோர் பிணமாக கிடந்ததையும் பார்த்து மகேஷ்வரி கதறி அழுதார்.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெஸ்கி, பரமத்தி வேலூர் துணை சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விஷம் குடித்து தற்கொலை
பின்னர் இறந்து போன 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக லாரி டிரைவர் முனியப்பன் தன் குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர்களின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே குடும்பத்தில் தந்தை மற்றும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment