Monday, September 15, 2014
உடுமலை, :உடு மலை அமராவதி நகரில் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க, வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ளது அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை பகுதிகள். இப்பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், அமராவதி வனச்சரகத்தையொட்டி இக்கிராமங்கள் உள்ளதால் வறட்சி காலங்களில் தண்ணீருக்காவும், உணவுக்காகவும் யானை கள், காட்டுப்பன்றி, செந்நாய்கள் போன்ற வனவிலங்குகள் இப்பகுதிக்குள் நுழைவது உண்டு.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சாயப்பட்டறை பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை கடித்து கொன்ற சிறுத்தை, அமராவதி நகரில் மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியையும், அமராவதி வனச்சரகர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயையும் அடுத்தடுத்து கொன்றது. சிறுத்தையின் இந்த அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
எனவே தங்களின் உயிருக்கும், கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனச்சரகரின் வீடருகே மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சிறுத்தையை பிடிப்பதற்காக வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் நேற்று மாலை கூண்டு ஒன்றை வனத்துறையினர் வைத்துள்ளனர். மேலும் சுற்றித்திரியும் சிறுத்தையை வரவைப்பதற்காக அதில் ஒரு ஆட்டையும் கட்டி வைத்துள்ளனர். வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் மலைப்பகுதி அமைந்துள்ளதால் அங்கு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுத்தை சிக்குமா என வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ளது அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை பகுதிகள். இப்பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், அமராவதி வனச்சரகத்தையொட்டி இக்கிராமங்கள் உள்ளதால் வறட்சி காலங்களில் தண்ணீருக்காவும், உணவுக்காகவும் யானை கள், காட்டுப்பன்றி, செந்நாய்கள் போன்ற வனவிலங்குகள் இப்பகுதிக்குள் நுழைவது உண்டு.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சாயப்பட்டறை பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை கடித்து கொன்ற சிறுத்தை, அமராவதி நகரில் மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியையும், அமராவதி வனச்சரகர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயையும் அடுத்தடுத்து கொன்றது. சிறுத்தையின் இந்த அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
எனவே தங்களின் உயிருக்கும், கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனச்சரகரின் வீடருகே மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சிறுத்தையை பிடிப்பதற்காக வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் நேற்று மாலை கூண்டு ஒன்றை வனத்துறையினர் வைத்துள்ளனர். மேலும் சுற்றித்திரியும் சிறுத்தையை வரவைப்பதற்காக அதில் ஒரு ஆட்டையும் கட்டி வைத்துள்ளனர். வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் மலைப்பகுதி அமைந்துள்ளதால் அங்கு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுத்தை சிக்குமா என வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment