Monday, September 15, 2014
உடுமலை, :உடு மலை அமராவதி நகரில் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க, வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ளது அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை பகுதிகள். இப்பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், அமராவதி வனச்சரகத்தையொட்டி இக்கிராமங்கள் உள்ளதால் வறட்சி காலங்களில் தண்ணீருக்காவும், உணவுக்காகவும் யானை கள், காட்டுப்பன்றி, செந்நாய்கள் போன்ற வனவிலங்குகள் இப்பகுதிக்குள் நுழைவது உண்டு.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சாயப்பட்டறை பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை கடித்து கொன்ற சிறுத்தை, அமராவதி நகரில் மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியையும், அமராவதி வனச்சரகர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயையும் அடுத்தடுத்து கொன்றது. சிறுத்தையின் இந்த அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
எனவே தங்களின் உயிருக்கும், கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனச்சரகரின் வீடருகே மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சிறுத்தையை பிடிப்பதற்காக வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் நேற்று மாலை கூண்டு ஒன்றை வனத்துறையினர் வைத்துள்ளனர். மேலும் சுற்றித்திரியும் சிறுத்தையை வரவைப்பதற்காக அதில் ஒரு ஆட்டையும் கட்டி வைத்துள்ளனர். வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் மலைப்பகுதி அமைந்துள்ளதால் அங்கு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுத்தை சிக்குமா என வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ளது அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை பகுதிகள். இப்பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், அமராவதி வனச்சரகத்தையொட்டி இக்கிராமங்கள் உள்ளதால் வறட்சி காலங்களில் தண்ணீருக்காவும், உணவுக்காகவும் யானை கள், காட்டுப்பன்றி, செந்நாய்கள் போன்ற வனவிலங்குகள் இப்பகுதிக்குள் நுழைவது உண்டு.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சாயப்பட்டறை பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை கடித்து கொன்ற சிறுத்தை, அமராவதி நகரில் மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியையும், அமராவதி வனச்சரகர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயையும் அடுத்தடுத்து கொன்றது. சிறுத்தையின் இந்த அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
எனவே தங்களின் உயிருக்கும், கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனச்சரகரின் வீடருகே மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சிறுத்தையை பிடிப்பதற்காக வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் நேற்று மாலை கூண்டு ஒன்றை வனத்துறையினர் வைத்துள்ளனர். மேலும் சுற்றித்திரியும் சிறுத்தையை வரவைப்பதற்காக அதில் ஒரு ஆட்டையும் கட்டி வைத்துள்ளனர். வனச்சரகரின் வீட்டிற்கு பின்புறம் மலைப்பகுதி அமைந்துள்ளதால் அங்கு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுத்தை சிக்குமா என வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment