Thursday, September 11, 2014
அவினாசி அருகே தெக்கலூரில் ஊருக்குள் புறவழிச்சாலை வழியாக சென்ற பஸ்களை பொது மக்கள் சிறை பிடித்தனர்.
அவினாசி ஒன்றியம் தெக்கலூர் திருப்பூர - கோவை மெயின்ரோட்டில் அவினாசியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு விசைத்தறிக்கூடங்கள் நூல்மில்கள், தனியார் கம்பெனிகள் அதிகளவில் உள்ளன.
தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக ஏராளமான பொதுமக்கள் தினசரி தெக்கலூர் வந்து கோவை, திருப்பூர் மற்றும் அவினாசிக்கு வந்து போகின்றனர். இது தவிர பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவர்கள் பஸ்சை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் மற்றும் கோவையிலிருந்து சென்று வரும் பஸ்கள் தெக்கலூருக்கு செல்லாமல் புறவழிச்சாலையில் சென்று விடுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புறவழிச்சாலையில் சென்ற பஸ்களை சிறைபிடித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் வெளியூர் செல்ல தெக்கலூர் பஸ்நிறுத்தத்தில் காத்திருந்தோம். பஸ்கள் அனைத்தும் ஊருக்குள் வராமல் சென்று விடுகின்றன. இதனால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம்.
ஏற்கனவே பலமுறை பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினோம். அப்போது போலீசார் வந்து இனிமேல் பஸ்கள் அனைத்தும் ஊருக்குள் வந்து பயணிகளை இறக்கி ஏற்றி செல்லும் என்றனர். ஆனால் அவ்வாறு பஸ்கள் வருவதில்லை.
தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கிருந்து வெளியூர்களுக்கு சென்று வருகிறோம். எனவே அனைத்து பஸ்களும் தெக்கலூருக்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பஸ்களை சிறைபிடித்துள்ளோம் என்றனர்.
தகவல் கிடைத்ததும் அவினாசி போலீசார் துணை சூப்பிரண்டு ராமசாமி, வட்டார போக்கு வரத்து அலுவலர் பால சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அனைத்து பஸ் நிர்வாகிகளையும் வரவழைத்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment