Saturday, October 04, 2014
சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரம் கம்ப்யூட்டர் பழுதானது. இதனால் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென குடியுரிமை பகுதி, போர்டிங் பாஸ் வழங்கும் பகுதி ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர்கள் பழுதாகி செயல் இழந்தது.
அப்போது சென்னையில் இருந்து லண்டன், குவைத், கொழும்பு, மஸ்கட், பக்ரைன் உள்பட 10 நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. அதில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் பாதுகாப்பு சோதனை மற்றும் குடியுரிமை சோதனை செய்வதற்காக நீண்ட வரிசையில் கவுண்ட்டர்களில் காத்து இருந்தனர்.
ஆனால் கம்ப்யூட்டர் பழுதானதால் விரைவாக சோதனை நடத்த முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் வந்து பார்த்தனர்.
இது பற்றி கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்களில் பலர் தசரா மற்றும் பக்ரீத் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இதையடுத்து பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்து மீண்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
5 மணிநேர போராட்டத்துக்கு பிறகு காலை 7.30 மணி அளவில் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதுவரை பயணிகள் சோதனை மற்றும் போர்டிங் பாஸ் வழங்கும் பணிக்காக கூடுதலான ஆட்களை நியமித்து வழங்கப்பட்டன.
இதனால் 10 விமானங்களும் சுமார் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...

0 comments:
Post a Comment