Saturday, October 04, 2014
சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரம் கம்ப்யூட்டர் பழுதானது. இதனால் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென குடியுரிமை பகுதி, போர்டிங் பாஸ் வழங்கும் பகுதி ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர்கள் பழுதாகி செயல் இழந்தது.
அப்போது சென்னையில் இருந்து லண்டன், குவைத், கொழும்பு, மஸ்கட், பக்ரைன் உள்பட 10 நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. அதில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் பாதுகாப்பு சோதனை மற்றும் குடியுரிமை சோதனை செய்வதற்காக நீண்ட வரிசையில் கவுண்ட்டர்களில் காத்து இருந்தனர்.
ஆனால் கம்ப்யூட்டர் பழுதானதால் விரைவாக சோதனை நடத்த முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் வந்து பார்த்தனர்.
இது பற்றி கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்களில் பலர் தசரா மற்றும் பக்ரீத் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இதையடுத்து பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்து மீண்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
5 மணிநேர போராட்டத்துக்கு பிறகு காலை 7.30 மணி அளவில் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதுவரை பயணிகள் சோதனை மற்றும் போர்டிங் பாஸ் வழங்கும் பணிக்காக கூடுதலான ஆட்களை நியமித்து வழங்கப்பட்டன.
இதனால் 10 விமானங்களும் சுமார் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...

0 comments:
Post a Comment