Saturday, October 04, 2014
சென்னை தண்டையார்பேட்டை ரெயில்வே யார்டில் மின்வயரில் சிக்கிய காற்றாடியை எடுக்க சென்றபோது மின்சாரம் தாக்கி 10–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 15). இவன், அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 1–ந் தேதி தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் ரெயில்வே யார்டில் உள்ள மின்சார கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க அங்கிருந்த ரெயில்வே பணி வண்டியில் ரமேஷ் ஏறினான். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்வயரில் அவனது உடல் உரசியது.
இதில் அவன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். படுகாயம் அடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி வ.உ.சி. நகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment