Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்படும்படியாக சென்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது கோணிப்பையில் 25 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார்(வயது 25) என்பதும், டாஸ்மாக் கடையில் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி டாஸ்மாக் கடை விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி அன்று திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது. சிவகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றினர்.

0 comments: