Saturday, October 11, 2014
காஞ்சீபுரம் அருகே பஸ்– லாரி மோதிய விபத்தில் 22 பேர் காயம் அடைந்தனர்
காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூர் அருகே உள்ள கணபதிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 40 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் நிறுவனத்தின் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை கணபதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார்.
காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரை–வேடல் கிராமத்துக்கு அருகே அந்த தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்னையில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது.
இதில் பஸ் டிரைவர் மணிகண்டன், சாலையை கடக்க முயன்ற வேடல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 55) இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தொழிலாளர்கள் நாகேந்திரன், சொக்கலிங்கம், அருள், சீனிவாசன், உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மாதவன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சிவக்குமார், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தொழிற்சாலை நிர்வாகத்தினர் காயம் அடைந்தவர்களை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
படுகாயம் அடைந்த பஸ் டிரைவர் மணிகண்டன், ஏழுமலை ஆகியோர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment