Saturday, October 11, 2014
காஞ்சீபுரம் அருகே பஸ்– லாரி மோதிய விபத்தில் 22 பேர் காயம் அடைந்தனர்
காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூர் அருகே உள்ள கணபதிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 40 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் நிறுவனத்தின் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை கணபதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார்.
காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரை–வேடல் கிராமத்துக்கு அருகே அந்த தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்னையில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது.
இதில் பஸ் டிரைவர் மணிகண்டன், சாலையை கடக்க முயன்ற வேடல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 55) இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தொழிலாளர்கள் நாகேந்திரன், சொக்கலிங்கம், அருள், சீனிவாசன், உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மாதவன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சிவக்குமார், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தொழிற்சாலை நிர்வாகத்தினர் காயம் அடைந்தவர்களை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
படுகாயம் அடைந்த பஸ் டிரைவர் மணிகண்டன், ஏழுமலை ஆகியோர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment