Sunday, October 19, 2014

On Sunday, October 19, 2014 by farook press in ,    
மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாஸ்போர்ட் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால், பாஸ்போர்ட் சேவா கேந்திரா என்று சென்னையில் சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போட் கிளை அலுவலகம் செயல்படுகின்றன. இந்த 3 அலுவலகத்திலும் நாள் ஒன்றுக்கு பாஸ்போட் கேட்டு 1,850 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. தற்போது, விண்ணப்பங்கள் அதிக அளவில் வருவதால், நாள் ஒன்றுக்கு 2,080 விண்ணப்பங்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வருகிற 30-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் அண்மை காலமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் கேட்டு வரும் விண்ணப்பம் நாள் ஒன்றுக்கு 110-ல் இருந்து 180 ஆக உயர்ந்துள்ளது. எனவே, சென்னையில் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் வருகிற நவம்பர் 1-ந் தேதி ‘பாஸ்போர்ட் மேளா’ நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்களது இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் அசல் சான்றிதழ் மற்றும் அதனுடைய 2 நகல்களையும் கொண்டு வரவேண்டும்.

0 comments: