Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
திருப்பூர்,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்ராட். இவர் திருப்பூர் வளையங்காடு வாசுகி நகர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது 3 வயது மகள் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதன்பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், அதே பகுதியை சேர்ந்த திருப்பூர் அரசு பள்ளியில் படித்து வரும் 17 வயது மாணவன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதைதொடர்ந்து பள்ளி மாணவனை கைது செய்த போலீசார் பொள்ளாச்சியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் மாணவனை சேர்த்தனர்.

0 comments: