Saturday, October 11, 2014
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்குமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் ஏராளமான வணிக நிறுவ னங்கள், தினசரி சந்தை, பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், அரசு– தனியார் அலுவலகங்கள், வங்கிகள் போன்றவை உள்ளன. இதனால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் அரசு மற்றும் தனியார் வாகனங் களில் மார்த்தாண்டம் வந்து செல்கிறார்கள். எனவே, மார்த்தாண்டம் நகரில் எப்போதும், வாகன நெருக் கடியும், பொதுமக்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும்.மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டமும், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகளின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது, பஸ் நிலையத்தில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை பல நேரங்களில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளை பார்த்து குரைப்பது, கடிக்க துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. மேலும், நாய்கள் தங்களுக்குள் சண்டை போட்டு வாகனங்களின் குறுக்காகவும், பயணிகள் மத்தியிலும் தாறுமாறாக ஓடுகின்றன. இதனால், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் அஞ்சி ஓடுகிறார்கள். மேலும், தாறுமாறாக ஓடும் நாய்கூட்டம் பல வேளைகளில் வாகனங்களின் குறுக்காக பாய்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போடும் போது விபத்துகள் நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் பஸ் நிலையத்தில் சுற்றி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் பஸ் நிலையத்தில் சுற்றி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...

0 comments:
Post a Comment