Saturday, October 11, 2014
குலசேகரம் அருகே ரப்பர் தோட்டத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.குலசேகரம் அருகே திருவரம்பு, குருவிகோடு பகுதியை சேர்ந்தவர் சுசீலா (வயது48). தோட்ட தொழிலாளி. இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். சுசீலா அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, 2 வாலிபர்கள் அங்கு வந்தனர்.அவர்கள் சுசீலாவின் அருகில் சென்று தங்களின் ஆசைக்கு இணங்கும்படி கூறி சில்மிஷம் செய்ததாக கூறப் படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த சுசீலா அலறினார்.அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழி லாளர்கள் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடினர்.இதுகுறித்து சுசீலா குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் அரமன்னம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சந்தோஷ் (19), பிரசாந்த் (21) ஆகியோர் தன்னிடம் சில்மிஷம் செய்ததாக கூறியுள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார், வாலிபர்கள் இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர். பிரசாந்தை போலீசார் தேடி வருகி றார்கள்.
அந்த புகாரின் பேரில் போலீசார், வாலிபர்கள் இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர். பிரசாந்தை போலீசார் தேடி வருகி றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment