Thursday, October 02, 2014
உடுமலை ஒட்டுக்குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன.
உடுமலையில் ஏழுகுளம் பாசன பகுதிகள் என்று அழைக்கப்படும் குளங்களுக்கு உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தளிவாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவரப் பட்டு பாசன பகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஏழு குளம் பகுதியின், கடைசி குளம் ஒட்டுக் குளம். இந்த ஒட்டுக் குளம் 10.150 சதுர கிலோமீட்டர் பரப்பளவு (நீர்பிடிப்பு பகுதி) கொண்டது. இந்த ஒட்டுக்குளத்தின் மூலம் சுண்டக்காம்பாளையம், வடபூதனம் ஆகிய கிராமங்களில் பாசன வசதி பெறக்கூடிய நிலப் பரப்பு சுமார் 430 ஏக்கர் உள்ளது.
இந்த ஒட்டுக்குளத்தில் நீர் தேங்கும் பரப்பில், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப் பிற்கு சொந்தமான ஏரியின் ஒரு பகுதியில் 5 ஏக்கர் 63 சென்ட் நிலப்பரப்பை 11 பேர் ஆக்கி ரமித்து நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.அங்கு 42 இளம் தென்னைமரங்களும் உள்ளன. கரும்பு பயிர் மகசூல் எடுக்கப்படும் தற்போது கட்டை கரும்பு துளிர் விட்ட நிலையில் உள்ளது.
ஒட்டுக்குளத்தில் தனியார்களின் ஆக்கிரமிப்பினால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அந்த பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் பொதுப்பணித்துறையை கேட்டுக்கொண்டார்.அத்துடன் சென்னை கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப் பணித்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர்.ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றறப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு சென்னை கோர்ட் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து உடுமலை ஆர்.டி.ஓ.குணசேகரன், தாசில்தார் எஸ்.சைபுதீன், நிலவருவாய் ஆய்வாளர் ராமலிங்கம். பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் செல்லமுத்து, இளம்பொறியாளர் சரவணன், தலைமை நில அளவர் தர்மலிங்கம், ஆகியோர் நேற்று ஒட்டுக்குளம் சென்றனர். பாதுகாப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வைத்தியலிங்கம், அன்பரசு, அனந்தநாயகி ஆகியோர் தலைமையில் 50 போலீசாருடன் சென்றிருந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் முன்னிலையில் ஜே.சி.பி. மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த இடம் பொதுப்பணித்துறைக்கு கையகப்படுத்தப்பட்டன.இந்த நடவடிக் கைகள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி 2007–ம் ஆண்டு தமிழ்நாடு ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment