Tuesday, October 07, 2014
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காலந்தாழ்த்தாது உடனடியாக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் திருப்பூரில் வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் பெருமாநல்லூரில் திங்களன்று காலை 8 மணிக்கு இந்த பிரச்சார இயக்கத்தை சிஐடியு பனியன் சங்கத் தலைவர் கே.காமராஜ் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பாண்டியன் நகர், போயம்பாளையம் பிரிவு, எஸ்.ஏ.பி.பின்புறம், சிட்கோ, கருவம்பாளையம், பல்லடம் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை உள்பட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பனியன் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளில் தொழிலாளர்கள் மத்தியில் போனஸ் உரிமையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் டி.குமார், மாவட்ட நி்ர்வாகிகள் பி.முருகேசன், பி.பாலன், ஜி.சம்பத் மற்றும் பனியன் சங்க நிர்வாகிகள் எம்.என்.நடராஜ், கே.நாகராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
இந்த பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக செவ்வாயன்று மாலை குமரன் சிலை அருகில் அனைத்து தொழில் சார்ந்த சிஐடியு சங்கங்கள் சார்பில் போனஸ் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment