Tuesday, October 07, 2014
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காலந்தாழ்த்தாது உடனடியாக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் திருப்பூரில் வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் பெருமாநல்லூரில் திங்களன்று காலை 8 மணிக்கு இந்த பிரச்சார இயக்கத்தை சிஐடியு பனியன் சங்கத் தலைவர் கே.காமராஜ் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பாண்டியன் நகர், போயம்பாளையம் பிரிவு, எஸ்.ஏ.பி.பின்புறம், சிட்கோ, கருவம்பாளையம், பல்லடம் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை உள்பட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பனியன் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளில் தொழிலாளர்கள் மத்தியில் போனஸ் உரிமையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் டி.குமார், மாவட்ட நி்ர்வாகிகள் பி.முருகேசன், பி.பாலன், ஜி.சம்பத் மற்றும் பனியன் சங்க நிர்வாகிகள் எம்.என்.நடராஜ், கே.நாகராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
இந்த பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக செவ்வாயன்று மாலை குமரன் சிலை அருகில் அனைத்து தொழில் சார்ந்த சிஐடியு சங்கங்கள் சார்பில் போனஸ் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment