Tuesday, September 07, 2021
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயிரம் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்கிடவும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கி வரும் உபரி பணியாளர்களை அரசு மற்றும் அரசுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்தும் ஏபிசி சுழற்சி முறை பணியிடமாறுதல வரவேண்டும் கொரோனாவால் உயிரிழந்த பணியாளருக்கு நிவாரண நிதி மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கிடவும் சிறு சிறு தவறுக்காக ஆண்டுக்கணக்கில் மதுபான கிடங்குகளில் பணியாற்றும் பணியாளர்களை உடனடியாக கடை பணியில் அமர்த்திடவும் பல்வேறு காரணங்களினால் பணியின்றி ஆண்டு கணக்கில் உள்ள பணியாளர்கள் பணி வழங்கிடவும் பல மாவட்டங்களில் மேலாண்மை இயக்குநரின் உத்தரவை மதிக்காமல் முறைகேடான நடவடிக்கையில் ஈடுபடும் மாவட்ட மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 5 மாவட்ட மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் ராமலிங்கம் ,கோவிந்தராஜன் , மாநில செயலாளர்கள்கல்யாணசுந்தரம் ,முருகானந்தம் கா.இளங்கோவன் ,இரா.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம்மாநிலத் தலைவர்பி.கே. சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment