Tuesday, October 07, 2014

On Tuesday, October 07, 2014 by farook press in ,    
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் அருகே மங்கலம் சுல்தான்பேட்டையில் சிஐடியு விசைத்தறித் தொழிற்சங்க நி்ர்வாகிகள் கூட்டம் சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அ.பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி, வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுக்கு கூடுதல் போனஸ் தொகையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும். இது தொடர்பாக விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து போனஸ் வழங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
​------------------

0 comments: