Monday, October 13, 2014
உடுமலை அருகே நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கேரளாவை சேர்ந்த சஜீத் முதல் பரிசு பெற்றார்.
உடுமலை பி.எம்.டபிள்யூ பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 7–வது ஆண்டு மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் உடுமலையை அடுத்துள்ள சின்னவீரம்பட்டியில் நேற்று நடந்தது. போட்டிகளை உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.நாகராஜன் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பி.எம்.டபிள்யூ பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சவுந்திரராஜன் வரவேற்றார்.
போட்டிகள் இந்தியன் ஓபன் கிளாஸ், ஓபன் கிளாஸ், எக்ஸ்பர்ட் கிளாஸ், நோவைஸ் கிளாஸ், பிகினர்ஸ் உள்ளிட்ட 8 பிரிவுகளில் நடந்தது. இந்த போட்டிகளில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மோட்டர் சைக்கிள் வீரர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் சீறி பாய்ந்தனர். இலக்கை சென்றடைய மண்ணில் புழுதியை கிளப்பியபடி சென்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்தியன் ஓபன் கிளாஸ் போட்டியில் கேரளாவை சேர்ந்த சஜீத்திற்கு முதல் பரிசாக பி.எம்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ரூ.12 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கோவை போத்தனூரைச் சேர்ந்த ஆனந்த்துக்கு 2–வது பரிசாக ரூ.8 ஆயிரமும், கேரளாவை சேர்ந்த மகேஷ்க்கு 3–வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
ஓபன் கிளாஸ் போட்டியில் கேரளாவை சேர்ந்த மகேசுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், சஜீத்துக்கு 2–வதுபரிசாக ரூ.5 ஆயிரமும், கோவையை சேர்ந்த ஜெகதீசுக்கு 3–வது பரிசாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்பட்டது.
எக்ஸ்பர்ட் கிளாஸ் போட்டியில் சஜீத்துக்கு முதல் பரிசாக ரூ.8 ஆயிரமும், மகேசுக்கு 2–வது பரிசாக ரூ.5 ஆயிரமும், கோவை போத்தனூரை சேர்ந்த ஆனந்துக்கு 3–வது பரிசாக ரூ.3 ஆயிரமும், நோவைஸ் கிளாப் போட்டியில் கோவை வீரர்களான எஸ்.பாண்டியனுக்கு முதல் பரிசாக ரூ.6 ஆயிரமும், நவநீதனுக்கு 2–வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3–வது பரிசாக விக்ரமுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
0 comments:
Post a Comment