Monday, October 13, 2014
உடுமலை அருகே நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கேரளாவை சேர்ந்த சஜீத் முதல் பரிசு பெற்றார்.
உடுமலை பி.எம்.டபிள்யூ பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 7–வது ஆண்டு மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் உடுமலையை அடுத்துள்ள சின்னவீரம்பட்டியில் நேற்று நடந்தது. போட்டிகளை உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.நாகராஜன் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பி.எம்.டபிள்யூ பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சவுந்திரராஜன் வரவேற்றார்.
போட்டிகள் இந்தியன் ஓபன் கிளாஸ், ஓபன் கிளாஸ், எக்ஸ்பர்ட் கிளாஸ், நோவைஸ் கிளாஸ், பிகினர்ஸ் உள்ளிட்ட 8 பிரிவுகளில் நடந்தது. இந்த போட்டிகளில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மோட்டர் சைக்கிள் வீரர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் சீறி பாய்ந்தனர். இலக்கை சென்றடைய மண்ணில் புழுதியை கிளப்பியபடி சென்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்தியன் ஓபன் கிளாஸ் போட்டியில் கேரளாவை சேர்ந்த சஜீத்திற்கு முதல் பரிசாக பி.எம்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ரூ.12 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கோவை போத்தனூரைச் சேர்ந்த ஆனந்த்துக்கு 2–வது பரிசாக ரூ.8 ஆயிரமும், கேரளாவை சேர்ந்த மகேஷ்க்கு 3–வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
ஓபன் கிளாஸ் போட்டியில் கேரளாவை சேர்ந்த மகேசுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், சஜீத்துக்கு 2–வதுபரிசாக ரூ.5 ஆயிரமும், கோவையை சேர்ந்த ஜெகதீசுக்கு 3–வது பரிசாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்பட்டது.
எக்ஸ்பர்ட் கிளாஸ் போட்டியில் சஜீத்துக்கு முதல் பரிசாக ரூ.8 ஆயிரமும், மகேசுக்கு 2–வது பரிசாக ரூ.5 ஆயிரமும், கோவை போத்தனூரை சேர்ந்த ஆனந்துக்கு 3–வது பரிசாக ரூ.3 ஆயிரமும், நோவைஸ் கிளாப் போட்டியில் கோவை வீரர்களான எஸ்.பாண்டியனுக்கு முதல் பரிசாக ரூ.6 ஆயிரமும், நவநீதனுக்கு 2–வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3–வது பரிசாக விக்ரமுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜி...
-
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகே...
0 comments:
Post a Comment