Saturday, October 11, 2014
தாராபுரம்,
விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட கணவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த மனைவி தாராபுரம் போலீஸ் நிலையம் வந்து கதறி அழுதார்.
கதவை தட்டினார்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே உள்ள பெரிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 35). கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா (30). நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ரவி மாலையில் வீடு திரும்பினார். பின்னர் இரவு தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவு நேரம் ரவியின் வீட்டின் முன்பு போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.
அதில் இருந்து சாதாரண உடையில் வந்தவர்கள் ரவி வீட்டின் கதவை தட்டினார்கள். உடனே கதவை திறந்த புஷ்பா, நீங்கள் யார்? என்றார். அப்போது வந்தவர்கள் “தாங்கள் தாராபுரம் போலீசார் என்றும், ரவியை ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்ல வந்து இருப்பதாகவும், அவர் எங்கே என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா, “தனது கணவர், எந்த பிரச்சினைக்கும் போகக்கூடியவர் அல்ல என்றும், எதுவாக இருந்தாலும் காலையில் போலீஸ் நிலையம் வருவார் என்றும் பதில் கூறினார்.
கண்ணீர்
அதற்குள் வீட்டிற்குள் புகுந்த போலீசார் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ரவியை எழுப்பி ஜீப்பில் அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் என்ற தகவல் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா தாராபுரம் போலீஸ் நிலையம் வந்தார்.
அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் கதறி அழுது நடந்த விபரத்தை கூறினார். அப்போது போலீசார் “ பெரிச்சிபாளையத்திற்கு தாராபுரம் போலீசார் வரவில்லை என்றும், நாங்கள் அப்படி யாரையாவது விசாரணைக்கு அழைக்க சென்றால் முறைப்படி தகவல் தெரிவிப்போம் என்றும் கூறினார்.
தாராபுரம் போலீசார் தனது கணவரை விசாரணைக்கு அழைத்து செல்லாததால் ரவுடிகள் அழைத்து சென்று இருக்கலாம் என்றும், எனவே தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இந்த பிரச்சினை குறித்து தாராபுரம் போலீசார் கூறுகையில் கீரனூர் பெரிச்சிபாளையம் சென்று விசாரணைக்காக யாரையும் அழைத்து செல்லவில்லை என்றும், ரவியை அழைத்து சென்று இருப்பவர்கள் உள்ளுர் போலீசாக இருக்கலாம் என்றும், தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment