Saturday, October 11, 2014
திருப்பூர் பி.என்.ரோடு லட்சுமிநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் நிதிநிறுவனத்தில் கள்ளச்சாவியை பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்று ரூ.81 ஆயிரம் இருந்த பணப்பெட்டியை திருடிச்சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், அந்த நிறுவனத்தின் ஊழியர் மாணிக்கம்(வயது 20), முன்னாள் ஊழியர்கள் யுவராஜ்(26), கார்த்திக்குமார்(20) மற்றும் கார்த்திக்குமாரின் நண்பர் வீரமணி(18) ஆகியோர் பணப்பெட்டியை திருடியது தெரியவந்தது. மேலும், அவினாசி அருகே அந்த பணப்பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை பங்கு போட்டுக்கொண்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் 4 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.25 ஆயிரம், ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரும் திருப்பூர் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment