Sunday, November 02, 2014
ஊத்துக்குளியில் எஸ்.மாருசாமி, வி.ஆர்.பழனிசாமி நினைவரங்கில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஆர்.அன்பழகன், கே.சரஸ்வதி மற்றும் கண்ணையன் ஆகியோர் தலைமைக்குழுவாகச் செயல்பட்டனர். மூத்த தோழர் செ.நடேசன் செங்கொடியை ஏற்றி வைத்தார். வி.கே.பழனிசாமி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆர்.மணியன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை ஆற்றினார். ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார் வேலையறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி வாழ்த்திப் பேசினார்.
இம்மாநாட்டில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், ஊத்துக்குளியில் 108 ஆம்புலன்ஸ் 24 மணி நேரம் நிறுத்தி வைத்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும், செங்கப்பள்ளி கூட்டுறவு சங்க நகை கடன் மோசடியில் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உடனடியாக நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டும், பல்லகவுண்டம்பாளையத்தில் நால்வழி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், பாப்பம்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் ஊத்துக்குளி ஒன்றியத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். முடிவில் கே.பெரியசாமி நன்றி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றிய நான்காவது மாநாட்டை ஞாயிறன்று தொடங்கி வைத்து பேசுகிறார் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ். உடன் ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார், மாநாட்டு தலைமைக்குழு உறுப்பினர்கள் ஆர்.அன்பழகன், கே.சரஸ்வதி, கண்ணையன் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
0 comments:
Post a Comment