Sunday, November 02, 2014
ஊத்துக்குளியில் எஸ்.மாருசாமி, வி.ஆர்.பழனிசாமி நினைவரங்கில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஆர்.அன்பழகன், கே.சரஸ்வதி மற்றும் கண்ணையன் ஆகியோர் தலைமைக்குழுவாகச் செயல்பட்டனர். மூத்த தோழர் செ.நடேசன் செங்கொடியை ஏற்றி வைத்தார். வி.கே.பழனிசாமி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆர்.மணியன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை ஆற்றினார். ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார் வேலையறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி வாழ்த்திப் பேசினார்.
இம்மாநாட்டில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், ஊத்துக்குளியில் 108 ஆம்புலன்ஸ் 24 மணி நேரம் நிறுத்தி வைத்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும், செங்கப்பள்ளி கூட்டுறவு சங்க நகை கடன் மோசடியில் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உடனடியாக நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டும், பல்லகவுண்டம்பாளையத்தில் நால்வழி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், பாப்பம்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் ஊத்துக்குளி ஒன்றியத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். முடிவில் கே.பெரியசாமி நன்றி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றிய நான்காவது மாநாட்டை ஞாயிறன்று தொடங்கி வைத்து பேசுகிறார் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ். உடன் ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார், மாநாட்டு தலைமைக்குழு உறுப்பினர்கள் ஆர்.அன்பழகன், கே.சரஸ்வதி, கண்ணையன் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment