Thursday, November 20, 2014
திருப்பூரில் நீர்நிலைகளைச் சுற்றியிருக்கும் தனியார் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்பதுடன், ஆற்றோரம் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று குடியிருப்பு ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகர மாநாடு வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகர 21வது மாநாடு ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் செங்குந்தபுரம் தோழர் என்.ஆறுமுகம் நினைவரங்கில் (ராஜகணபதி மண்டபம்) நடைபெற்றது.
மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.விஜயா செங்கொடியை ஏற்றி வைத்தார். பி.பாலன் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். ஜி.ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால் முன்வைத்த அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம் வாழ்த்திப் பேசினார்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில் ஆற்றோரங்களில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று குடியிருப்பு ஏற்பாடு செய்யமல் அவர்களை அங்கிருந்து அகற்றக் கூடாது, ஜம்மனை மற்றும் வெள்ளியங்காடு பாலங்களை உயர்த்திக் கட்ட வேண்டும், முத்தையன் நகர், ஜம்மனை, சத்யாநகர் பகுதிகளில் ஓடை ஓரங்களில் தடுப்புச் சுவர் கட்டி பாதுகாப்பு வழங்க வேண்டும், குடிமனை பட்டா, அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும்.
திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்குவதுடன், சிறப்பு நிதி ஒதுக்கி எல்ஆர்ஜி கல்லூரியை மேம்படுத்த வேண்டும், டவுன்ஹால் அரங்கை வியாபார நோக்கில் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, திருட்டு, வழிப்பறி, சமூக விரோத செயல்களை நகரில் கட்டுப்படுத்த வேண்டும், பெண்களுக்கு தனிப் பேருந்துகள் இயக்க வேண்டும், செல்லாண்டியம்மன் துறை அரசு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநகரக்குழு
இம்மாநாட்டில் எம்.ராஜகோபால் மாநகரக்குழுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இவருடன் எஸ்.சுந்தரம், டி.ஜெயபால், பி.பாலன், ஆறுக்குட்டி, கே.பொம்முதுரை, ஏ.சுப்பிரமணியம், ஜி.மூர்த்தி, ஏ.முருகசாமி, ஏ.ஷகிலா, ஜி.செந்தில்குமார், எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.பானுமதி, டி.நவீன் லட்சுமணன் ஆகிய 14 பேர் மாநகரக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட மாநாடு பிரதிநிதிகளாக 3 பெண்கள் உள்பட 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். முடிவில் சி.முருகேஷ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment