Sunday, November 09, 2014
சத்துணவு ஊழியர்களின் நிலுவைக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நவம்பர் 17 முதல் 28 ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் இரண்டாவது மாவட்ட பேரவை சனியன்று கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் மாவட்டத் தலைவர் எஸ்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.சுசீலா வரவேற்றார்.
மாநிலச் செயலாளர் பி.பேயத்தேவன் பேரவையைத் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் கே.பால்ராஜ் அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டப் பொருளாளர் கே.முத்தமிழ்ராஜ் வரவு செலவு அறிக்கையை முன்வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அம்சராஜ் வாழ்த்திப் பேசினார்.
இதில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், சட்டரீதியான குடும்ப பென்சன், மாநகராட்சியில் காலியாக உள்ள ஆறு பணியிடங்களை நிரப்புவது, ஓய்வு பெற்றோர் பணப்பலன்களை உடனடியாக வழங்குவது, 13 வகை உணவுக்கு முன் மானியம் வழங்க வேண்டும், மாறுதல் கோரும் அனைத்து ஊழியர்களுக்கும் மாறுதல் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் ஒன்றியஅளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாட்டை நிறைவு செய்து வைத்து மாநிலத் தலைவர் கே.பழனிசாமி உரையாற்றினார். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment