Sunday, November 09, 2014
சத்துணவு ஊழியர்களின் நிலுவைக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நவம்பர் 17 முதல் 28 ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் இரண்டாவது மாவட்ட பேரவை சனியன்று கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் மாவட்டத் தலைவர் எஸ்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.சுசீலா வரவேற்றார்.
மாநிலச் செயலாளர் பி.பேயத்தேவன் பேரவையைத் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் கே.பால்ராஜ் அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டப் பொருளாளர் கே.முத்தமிழ்ராஜ் வரவு செலவு அறிக்கையை முன்வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அம்சராஜ் வாழ்த்திப் பேசினார்.
இதில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், சட்டரீதியான குடும்ப பென்சன், மாநகராட்சியில் காலியாக உள்ள ஆறு பணியிடங்களை நிரப்புவது, ஓய்வு பெற்றோர் பணப்பலன்களை உடனடியாக வழங்குவது, 13 வகை உணவுக்கு முன் மானியம் வழங்க வேண்டும், மாறுதல் கோரும் அனைத்து ஊழியர்களுக்கும் மாறுதல் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் ஒன்றியஅளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாட்டை நிறைவு செய்து வைத்து மாநிலத் தலைவர் கே.பழனிசாமி உரையாற்றினார். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment