Saturday, November 29, 2014
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டி நேருநகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). இவருடைய மகன் சுகனேஸ்வரன் (35). கணினி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தாராபுரம் நாச்சிமுத்துபுதூரை சேர்ந்த முத்தம்மாள் (70) என்பவரின் மகள் கிருத்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சுகனேஸ்வரன் தனது பெற்றோருடன் வசிக்காமல், தனது மாமியார் வீடான தாராபுரத்தில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து பெருமாள் தனது மகன் சுகனேஸ்வரனை தன்னுடன் வந்து வசிக்குமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் சுகனேஸ்வரன் மாமியார் வீட்டில் தொடர்ந்து வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முத்தம்மாள் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பெருமாள் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெருமாள் தான் வைத்திருந்த கத்தியால் முத்தம்மாளையும், பத்மாவதியையும் குத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்தவர்கள் பெருமாளை பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பெருமாள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். கத்திக்குத்து பட்ட தாய்க்கும், மகளுக்கும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பெருமாள் தனது மகன் சுகனேஸ்வரனை தன்னுடன் வந்து வசிக்குமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் சுகனேஸ்வரன் மாமியார் வீட்டில் தொடர்ந்து வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முத்தம்மாள் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பெருமாள் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெருமாள் தான் வைத்திருந்த கத்தியால் முத்தம்மாளையும், பத்மாவதியையும் குத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்தவர்கள் பெருமாளை பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், பெருமாள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். கத்திக்குத்து பட்ட தாய்க்கும், மகளுக்கும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...

0 comments:
Post a Comment