Saturday, November 29, 2014
ஆதார் அட்டைக்கு தாலுகா அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பதிவு முகாம் வருகிற 1–ந் தேதி(திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளது.
ஆதார்’ எனும் தேசிய அடையாள அட்டை தயாரிப்பதற்காக, கைரேகை, கண் விழி மற்றும் புகைப்படம் எடுக்கும் ‘பயோமெட்ரிக்’ முகாம், நாடு முழுவதும் நடந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் 15 லட்சத்து 42 ஆயிரம் பேரின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுபட்டோருக்கான முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின், ஆதார் அட்டை திட்டம் தொடருமா? விடுபட்டோருக்கு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. அரசு திட்டங்களில் மானியம் பெற, வங்கி கணக்கு அவசியம் என்பதால், ஆதார் அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. விடுபட்டோருக்கு ஆதார் அட்டை வழங்க ஏதுவாக, தாலுகா அலுவலகங்களில், நிரந்தர மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்கான நிரந்தர பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 1–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
ஆதார் அட்டைக்கான உடற்கூறு பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, நிரந்தர பதிவு முகாமில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களின் சான்றொப்பம் பெற்றதும், உடனடியாக உடற்கூறுகளை பதிவு செய்யலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார்’ எனும் தேசிய அடையாள அட்டை தயாரிப்பதற்காக, கைரேகை, கண் விழி மற்றும் புகைப்படம் எடுக்கும் ‘பயோமெட்ரிக்’ முகாம், நாடு முழுவதும் நடந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் 15 லட்சத்து 42 ஆயிரம் பேரின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுபட்டோருக்கான முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின், ஆதார் அட்டை திட்டம் தொடருமா? விடுபட்டோருக்கு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. அரசு திட்டங்களில் மானியம் பெற, வங்கி கணக்கு அவசியம் என்பதால், ஆதார் அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. விடுபட்டோருக்கு ஆதார் அட்டை வழங்க ஏதுவாக, தாலுகா அலுவலகங்களில், நிரந்தர மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்கான நிரந்தர பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 1–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
ஆதார் அட்டைக்கான உடற்கூறு பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, நிரந்தர பதிவு முகாமில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களின் சான்றொப்பம் பெற்றதும், உடனடியாக உடற்கூறுகளை பதிவு செய்யலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...

0 comments:
Post a Comment