Saturday, November 29, 2014
ஆதார் அட்டைக்கு தாலுகா அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பதிவு முகாம் வருகிற 1–ந் தேதி(திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளது.
ஆதார்’ எனும் தேசிய அடையாள அட்டை தயாரிப்பதற்காக, கைரேகை, கண் விழி மற்றும் புகைப்படம் எடுக்கும் ‘பயோமெட்ரிக்’ முகாம், நாடு முழுவதும் நடந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் 15 லட்சத்து 42 ஆயிரம் பேரின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுபட்டோருக்கான முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின், ஆதார் அட்டை திட்டம் தொடருமா? விடுபட்டோருக்கு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. அரசு திட்டங்களில் மானியம் பெற, வங்கி கணக்கு அவசியம் என்பதால், ஆதார் அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. விடுபட்டோருக்கு ஆதார் அட்டை வழங்க ஏதுவாக, தாலுகா அலுவலகங்களில், நிரந்தர மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்கான நிரந்தர பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 1–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
ஆதார் அட்டைக்கான உடற்கூறு பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, நிரந்தர பதிவு முகாமில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களின் சான்றொப்பம் பெற்றதும், உடனடியாக உடற்கூறுகளை பதிவு செய்யலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார்’ எனும் தேசிய அடையாள அட்டை தயாரிப்பதற்காக, கைரேகை, கண் விழி மற்றும் புகைப்படம் எடுக்கும் ‘பயோமெட்ரிக்’ முகாம், நாடு முழுவதும் நடந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் 15 லட்சத்து 42 ஆயிரம் பேரின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுபட்டோருக்கான முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின், ஆதார் அட்டை திட்டம் தொடருமா? விடுபட்டோருக்கு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. அரசு திட்டங்களில் மானியம் பெற, வங்கி கணக்கு அவசியம் என்பதால், ஆதார் அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. விடுபட்டோருக்கு ஆதார் அட்டை வழங்க ஏதுவாக, தாலுகா அலுவலகங்களில், நிரந்தர மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்கான நிரந்தர பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 1–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
ஆதார் அட்டைக்கான உடற்கூறு பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, நிரந்தர பதிவு முகாமில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களின் சான்றொப்பம் பெற்றதும், உடனடியாக உடற்கூறுகளை பதிவு செய்யலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment