Saturday, November 29, 2014
ஆதார் அட்டைக்கு தாலுகா அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பதிவு முகாம் வருகிற 1–ந் தேதி(திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளது.
ஆதார்’ எனும் தேசிய அடையாள அட்டை தயாரிப்பதற்காக, கைரேகை, கண் விழி மற்றும் புகைப்படம் எடுக்கும் ‘பயோமெட்ரிக்’ முகாம், நாடு முழுவதும் நடந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் 15 லட்சத்து 42 ஆயிரம் பேரின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுபட்டோருக்கான முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின், ஆதார் அட்டை திட்டம் தொடருமா? விடுபட்டோருக்கு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. அரசு திட்டங்களில் மானியம் பெற, வங்கி கணக்கு அவசியம் என்பதால், ஆதார் அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. விடுபட்டோருக்கு ஆதார் அட்டை வழங்க ஏதுவாக, தாலுகா அலுவலகங்களில், நிரந்தர மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்கான நிரந்தர பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 1–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
ஆதார் அட்டைக்கான உடற்கூறு பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, நிரந்தர பதிவு முகாமில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களின் சான்றொப்பம் பெற்றதும், உடனடியாக உடற்கூறுகளை பதிவு செய்யலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார்’ எனும் தேசிய அடையாள அட்டை தயாரிப்பதற்காக, கைரேகை, கண் விழி மற்றும் புகைப்படம் எடுக்கும் ‘பயோமெட்ரிக்’ முகாம், நாடு முழுவதும் நடந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் 15 லட்சத்து 42 ஆயிரம் பேரின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுபட்டோருக்கான முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின், ஆதார் அட்டை திட்டம் தொடருமா? விடுபட்டோருக்கு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. அரசு திட்டங்களில் மானியம் பெற, வங்கி கணக்கு அவசியம் என்பதால், ஆதார் அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. விடுபட்டோருக்கு ஆதார் அட்டை வழங்க ஏதுவாக, தாலுகா அலுவலகங்களில், நிரந்தர மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்கான நிரந்தர பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 1–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
ஆதார் அட்டைக்கான உடற்கூறு பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, நிரந்தர பதிவு முகாமில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களின் சான்றொப்பம் பெற்றதும், உடனடியாக உடற்கூறுகளை பதிவு செய்யலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment