Thursday, January 08, 2015
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அய்யப்ப பக்தர்கள்
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கோகாஸ் அருகே மசுக்குட்டியை சேர்ந்த லிங்கைய்யாசாமி(வயது 65), முருகப்பா(55), சிவானந்தா(40), சிவானந்த்(45), லிங்கமப்பா(59) உள்பட 9 பேர் கடந்த 30-ந் தேதி தங்களது ஊரில் இருந்து புறப்பட்டு சபரிமலைக்கு ஜீப்பில் சென்றனர். ஜீப்பை அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சிவராஜ்(24) என்பவர் ஓட்டினார்.
சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நேற்றுமுன்தினம் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் வழியாக சத்தியமங்கலம் சென்று கர்நாடக மாநிலத்தை அடைந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். இதன்படி நேற்று அதிகாலை 1½ மணி அளவில் அவர்கள் வந்த ஜீப் திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தது.அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜீப்பின் முன்பகுதி லாரியின் பின்பகுதிக்குள் புகுந்து விட்டது. இதன்காரணமாக ஜீப்பில் இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சிவானந்தா, சிவானந்த், லிங்கமப்பா, டிரைவர் சிவராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 4 பேர் லேசான காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜீப்புக்குள் இடிபாடுகளில் சிக்கி இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகியோரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அய்யப்ப பக்தர்கள்
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கோகாஸ் அருகே மசுக்குட்டியை சேர்ந்த லிங்கைய்யாசாமி(வயது 65), முருகப்பா(55), சிவானந்தா(40), சிவானந்த்(45), லிங்கமப்பா(59) உள்பட 9 பேர் கடந்த 30-ந் தேதி தங்களது ஊரில் இருந்து புறப்பட்டு சபரிமலைக்கு ஜீப்பில் சென்றனர். ஜீப்பை அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சிவராஜ்(24) என்பவர் ஓட்டினார்.
சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நேற்றுமுன்தினம் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் வழியாக சத்தியமங்கலம் சென்று கர்நாடக மாநிலத்தை அடைந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். இதன்படி நேற்று அதிகாலை 1½ மணி அளவில் அவர்கள் வந்த ஜீப் திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தது.அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜீப்பின் முன்பகுதி லாரியின் பின்பகுதிக்குள் புகுந்து விட்டது. இதன்காரணமாக ஜீப்பில் இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சிவானந்தா, சிவானந்த், லிங்கமப்பா, டிரைவர் சிவராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 4 பேர் லேசான காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜீப்புக்குள் இடிபாடுகளில் சிக்கி இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகியோரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...

0 comments:
Post a Comment