Thursday, January 08, 2015
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அய்யப்ப பக்தர்கள்
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கோகாஸ் அருகே மசுக்குட்டியை சேர்ந்த லிங்கைய்யாசாமி(வயது 65), முருகப்பா(55), சிவானந்தா(40), சிவானந்த்(45), லிங்கமப்பா(59) உள்பட 9 பேர் கடந்த 30-ந் தேதி தங்களது ஊரில் இருந்து புறப்பட்டு சபரிமலைக்கு ஜீப்பில் சென்றனர். ஜீப்பை அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சிவராஜ்(24) என்பவர் ஓட்டினார்.
சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நேற்றுமுன்தினம் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் வழியாக சத்தியமங்கலம் சென்று கர்நாடக மாநிலத்தை அடைந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். இதன்படி நேற்று அதிகாலை 1½ மணி அளவில் அவர்கள் வந்த ஜீப் திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தது.அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜீப்பின் முன்பகுதி லாரியின் பின்பகுதிக்குள் புகுந்து விட்டது. இதன்காரணமாக ஜீப்பில் இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சிவானந்தா, சிவானந்த், லிங்கமப்பா, டிரைவர் சிவராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 4 பேர் லேசான காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜீப்புக்குள் இடிபாடுகளில் சிக்கி இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகியோரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அய்யப்ப பக்தர்கள்
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கோகாஸ் அருகே மசுக்குட்டியை சேர்ந்த லிங்கைய்யாசாமி(வயது 65), முருகப்பா(55), சிவானந்தா(40), சிவானந்த்(45), லிங்கமப்பா(59) உள்பட 9 பேர் கடந்த 30-ந் தேதி தங்களது ஊரில் இருந்து புறப்பட்டு சபரிமலைக்கு ஜீப்பில் சென்றனர். ஜீப்பை அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சிவராஜ்(24) என்பவர் ஓட்டினார்.
சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நேற்றுமுன்தினம் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் வழியாக சத்தியமங்கலம் சென்று கர்நாடக மாநிலத்தை அடைந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். இதன்படி நேற்று அதிகாலை 1½ மணி அளவில் அவர்கள் வந்த ஜீப் திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தது.அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜீப்பின் முன்பகுதி லாரியின் பின்பகுதிக்குள் புகுந்து விட்டது. இதன்காரணமாக ஜீப்பில் இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சிவானந்தா, சிவானந்த், லிங்கமப்பா, டிரைவர் சிவராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 4 பேர் லேசான காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜீப்புக்குள் இடிபாடுகளில் சிக்கி இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகியோரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment