Thursday, January 08, 2015
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அய்யப்ப பக்தர்கள்
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கோகாஸ் அருகே மசுக்குட்டியை சேர்ந்த லிங்கைய்யாசாமி(வயது 65), முருகப்பா(55), சிவானந்தா(40), சிவானந்த்(45), லிங்கமப்பா(59) உள்பட 9 பேர் கடந்த 30-ந் தேதி தங்களது ஊரில் இருந்து புறப்பட்டு சபரிமலைக்கு ஜீப்பில் சென்றனர். ஜீப்பை அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சிவராஜ்(24) என்பவர் ஓட்டினார்.
சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நேற்றுமுன்தினம் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் வழியாக சத்தியமங்கலம் சென்று கர்நாடக மாநிலத்தை அடைந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். இதன்படி நேற்று அதிகாலை 1½ மணி அளவில் அவர்கள் வந்த ஜீப் திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தது.அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜீப்பின் முன்பகுதி லாரியின் பின்பகுதிக்குள் புகுந்து விட்டது. இதன்காரணமாக ஜீப்பில் இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சிவானந்தா, சிவானந்த், லிங்கமப்பா, டிரைவர் சிவராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 4 பேர் லேசான காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜீப்புக்குள் இடிபாடுகளில் சிக்கி இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகியோரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அய்யப்ப பக்தர்கள்
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கோகாஸ் அருகே மசுக்குட்டியை சேர்ந்த லிங்கைய்யாசாமி(வயது 65), முருகப்பா(55), சிவானந்தா(40), சிவானந்த்(45), லிங்கமப்பா(59) உள்பட 9 பேர் கடந்த 30-ந் தேதி தங்களது ஊரில் இருந்து புறப்பட்டு சபரிமலைக்கு ஜீப்பில் சென்றனர். ஜீப்பை அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சிவராஜ்(24) என்பவர் ஓட்டினார்.
சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நேற்றுமுன்தினம் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் வழியாக சத்தியமங்கலம் சென்று கர்நாடக மாநிலத்தை அடைந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். இதன்படி நேற்று அதிகாலை 1½ மணி அளவில் அவர்கள் வந்த ஜீப் திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தது.அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜீப்பின் முன்பகுதி லாரியின் பின்பகுதிக்குள் புகுந்து விட்டது. இதன்காரணமாக ஜீப்பில் இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சிவானந்தா, சிவானந்த், லிங்கமப்பா, டிரைவர் சிவராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 4 பேர் லேசான காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜீப்புக்குள் இடிபாடுகளில் சிக்கி இருந்த லிங்கைய்யாசாமி, முருகப்பா ஆகியோரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment