Thursday, January 01, 2015
பகிர்க

ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் குழுமியிருந்தவர்கள் மீது ராக்கெட் விழுந்ததில் குறைந்தது இருபதுபேர் கொல்லப்பட்டனர்.
நாற்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதில் பெண்களும் சிறு குழந்தைகளும் அடங்கும்.
ஆப்கானிஸ்தானின் தெற்கத்திய பிராந்தியமான ஹெல்மண்ட் பிராந்தியத்தில் திருமண விருந்து நடந்துகொண்டிருந்த வீட்டின் மீது இந்த ராக்கெட் விழுந்ததில் இந்த உயிரிழப்புக்கள் நடந்திருக்கின்றன.
மணமகளை வரவேற்பதற்காக விருந்தினர்கள் அந்த வீட்டிற்கு வெளியே குழுமிக்கொண்டிருந்த சமயத்தில் இந்த ராக்கெட் அங்கே விழுந்ததாக அந்த கட்டிட உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.
தனது குழந்தைகள் ஒன்பது பேரும் இதில் காணாமல் போயிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் ராணுவத்தினருக்கும் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையில் புதன்கிழமையன்று நடந்த மோதலின்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த நாடோ மற்றும் அமெரிக்காவின் தாக்கும் படைப்பிரிவுகள் கடைசியாக அங்கிருந்து வெளியேறிய நாளாகவும் நேற்று புதன்கிழமை இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment