Thursday, January 01, 2015
பகிர்க

ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் குழுமியிருந்தவர்கள் மீது ராக்கெட் விழுந்ததில் குறைந்தது இருபதுபேர் கொல்லப்பட்டனர்.
நாற்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதில் பெண்களும் சிறு குழந்தைகளும் அடங்கும்.
ஆப்கானிஸ்தானின் தெற்கத்திய பிராந்தியமான ஹெல்மண்ட் பிராந்தியத்தில் திருமண விருந்து நடந்துகொண்டிருந்த வீட்டின் மீது இந்த ராக்கெட் விழுந்ததில் இந்த உயிரிழப்புக்கள் நடந்திருக்கின்றன.
மணமகளை வரவேற்பதற்காக விருந்தினர்கள் அந்த வீட்டிற்கு வெளியே குழுமிக்கொண்டிருந்த சமயத்தில் இந்த ராக்கெட் அங்கே விழுந்ததாக அந்த கட்டிட உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.
தனது குழந்தைகள் ஒன்பது பேரும் இதில் காணாமல் போயிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் ராணுவத்தினருக்கும் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையில் புதன்கிழமையன்று நடந்த மோதலின்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த நாடோ மற்றும் அமெரிக்காவின் தாக்கும் படைப்பிரிவுகள் கடைசியாக அங்கிருந்து வெளியேறிய நாளாகவும் நேற்று புதன்கிழமை இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment