Thursday, January 01, 2015
சீனாவின் ஷாங்காய் நதிக்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகினர். மேலும் 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஷாங்காயில் உள்ள பண்ட் நதிக்கரையில் புத்தாண்டு தினத்தை வரவேற்பதற்காக நேற்றிரவு மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் குவிந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு 35 பேர் பலியாகினர். மேலும் 46 பேர் படுகாயம் அடைந்தனர். நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயன்றபோதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்ட் நதிக்கரையிலிருந்து ஷென் யி சதுக்கம் வரையில் கூட்ட நெரிசல் குவிந்திருந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதற்கான உரிய காரணம் கண்டறியப்படவில்லை.
கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் பண்ட் நதிக்கரையில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூட்டம் குவிந்தனர். இதனால் ஆபத்தை தவிர்க்கும் நோக்கத்தோடு வழக்கமாக நதிக்கரையில் நடத்தப்படும் 3டி லேசர் நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தாண்டியும் நிகழ்ந்துள்ள இந்த விபத்து, புத்தாண்டு தொடக்கத்தில் சீன மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment