Thursday, January 01, 2015

டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கினார்| படம்: ஆர்.வி.மூர்த்தி
தலைநகர் டெல்லியில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 'ஹிம்மத்' என்ற செல்பேசி செயலி (மொபைல் அப்ளிகேஷன்) சேவையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த செல்பேசி செயலி சேவையை டெல்லி போலீஸார் உருவாக்கியுள்ளனர்.
இந்த சேவை குறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பெண்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தாங்கள் ஏதாவது இக்கட்டான சூழலில் சிக்கிக்கொள்ளும்போது செல்பேசியின் பவர் பொத்தானை அழுத்தினால் 30 விநாடிகளுக்கு ஆடியோ, வீடியோ பதிவாகும்.
இதை பயன்படுத்தி காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் உடனடியாக தகவல் அளிக்க முடியும். இதில் செயலியுடன் தங்களுக்கு நெருக்கமான 5 பேரது தொலைபேசி எண்களை இணைத்துக் கொள்ள வசதி உள்ளது.
எனவே, அவசர உதவி அழைப்பு மேற்கொள்ளும்போது 5 பேருக்கும் குறுந்தகவல் செல்லும். இதன்மூலம் போலீஸார் மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களும் அவருக்கு உதவிக்கரம் நீட்ட வாய்ப்பு ஏற்படும்" என்றார்.
டெல்லியில் அண்மையில் பணி முடிந்து கால் டாக்ஸியில் வீடு திரும்பிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு சற்றும் இல்லை என அரசியல் கட்சிகள் சாடின. இத்தகைய சூழலில், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 'ஹிம்மத்' என்ற கைபேசி செயலி சேவையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment