Thursday, January 01, 2015

டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கினார்| படம்: ஆர்.வி.மூர்த்தி
தலைநகர் டெல்லியில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 'ஹிம்மத்' என்ற செல்பேசி செயலி (மொபைல் அப்ளிகேஷன்) சேவையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த செல்பேசி செயலி சேவையை டெல்லி போலீஸார் உருவாக்கியுள்ளனர்.
இந்த சேவை குறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பெண்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தாங்கள் ஏதாவது இக்கட்டான சூழலில் சிக்கிக்கொள்ளும்போது செல்பேசியின் பவர் பொத்தானை அழுத்தினால் 30 விநாடிகளுக்கு ஆடியோ, வீடியோ பதிவாகும்.
இதை பயன்படுத்தி காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் உடனடியாக தகவல் அளிக்க முடியும். இதில் செயலியுடன் தங்களுக்கு நெருக்கமான 5 பேரது தொலைபேசி எண்களை இணைத்துக் கொள்ள வசதி உள்ளது.
எனவே, அவசர உதவி அழைப்பு மேற்கொள்ளும்போது 5 பேருக்கும் குறுந்தகவல் செல்லும். இதன்மூலம் போலீஸார் மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களும் அவருக்கு உதவிக்கரம் நீட்ட வாய்ப்பு ஏற்படும்" என்றார்.
டெல்லியில் அண்மையில் பணி முடிந்து கால் டாக்ஸியில் வீடு திரும்பிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு சற்றும் இல்லை என அரசியல் கட்சிகள் சாடின. இத்தகைய சூழலில், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 'ஹிம்மத்' என்ற கைபேசி செயலி சேவையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment