Wednesday, January 14, 2015

On Wednesday, January 14, 2015 by farook press in ,    
எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சகிப்புத்தன்மையற்ற மதவெறி சக்திகளை கண்டித்து திருப்பூரில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
திருப்பூர் குமரன் சிலை முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். இதில் படைப்பாளிகளின் சுதந்திரத்திற்கு மிரட்டல் விடுக்கும் மதவெறி சக்திகளை எதிர்த்தும், எழுத்து, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதோடு, படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வலியறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டத் துணைத் தலைவர் செ.நடேசன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கலை இலக்கிய பேரவை பொதுச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், கவிஞர் மகுடேஸ்வரன், ஆசிரியர் சிவகாமி, இளஞாயிறு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


0 comments: