Wednesday, January 14, 2015
எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சகிப்புத்தன்மையற்ற மதவெறி சக்திகளை கண்டித்து திருப்பூரில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
திருப்பூர் குமரன் சிலை முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். இதில் படைப்பாளிகளின் சுதந்திரத்திற்கு மிரட்டல் விடுக்கும் மதவெறி சக்திகளை எதிர்த்தும், எழுத்து, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதோடு, படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வலியறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டத் துணைத் தலைவர் செ.நடேசன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கலை இலக்கிய பேரவை பொதுச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், கவிஞர் மகுடேஸ்வரன், ஆசிரியர் சிவகாமி, இளஞாயிறு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment