Wednesday, January 14, 2015
எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சகிப்புத்தன்மையற்ற மதவெறி சக்திகளை கண்டித்து திருப்பூரில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
திருப்பூர் குமரன் சிலை முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். இதில் படைப்பாளிகளின் சுதந்திரத்திற்கு மிரட்டல் விடுக்கும் மதவெறி சக்திகளை எதிர்த்தும், எழுத்து, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதோடு, படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வலியறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டத் துணைத் தலைவர் செ.நடேசன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கலை இலக்கிய பேரவை பொதுச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், கவிஞர் மகுடேஸ்வரன், ஆசிரியர் சிவகாமி, இளஞாயிறு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment