Wednesday, January 14, 2015
தாராபுரம், ஜன. 13: தாராபுரம் அருகே உள்ள தர்கா உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தாராபுரம்- கரூர் சாலையில் காளிபாளையம் கிராமத்தில் உள்ளது குண்டுலெப்பை சாயபு தர்கா. இந்தத் தர்காவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வழிபடுவதும், காணிக்கை செலுத்துவதும் வழக்கம். இந்நிலையில், இந்தத் தர்கா நிர்வாகத்தினர், திங்கள்கிழமை மாலை தர்காவை வழக்கம் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். பிறகு, செவ்வாய்க்கிழமை காலை, தர்காவை திறந்துள்ளனர். அப்போது, தர்காவின் மேற்கூரை பிரிக்கப்பட்டு உள்ளிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து தர்கா நிர்வாகத்தினர் அளித்த புகாரின்பேரில், தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6 மாதமாக திறக்கப்படாத இந்த உண்டியலில் ரூ.1லட்சம் இருக்கும் என தர்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment