Wednesday, January 14, 2015
பொங்கல் மற்றும் இதர இனிப்பு, பலகாரங்ளை கால்நடைகளுக்கு வழங்குவதால் அவற்றுக்கு அமிலநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, திருப்பூர் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி நிலையத் தலைவர் ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கால்நடைகள் வழக்கமாக உண்ணும் வைக்கோல், தீவனங்களை தவிர்த்து மாவுப் பொருள்களையும், சர்க்கரை சத்து மிகுந்த பொருள்களையும் உண்பதால் அவற்றுக்கு அமிலநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்குப் பின், கால்நடைகளை இந்நோய் அதிகளவில் தாக்குவதாக மருத்துவக் கணக்கெடுப்பு உறுதிபடுத்துகிறது.
இந்நோய்த் தாக்குதலுக்குள்ளான கால்நடைகளின் வயிறு வீóக்கம், வயிற்றில் அதிகளவு நீர்த்தேக்கம், நாக்கு வறண்டு தாகம் எடுத்தல், வயிறு அசைவின்மை, தீவனம் உண்ணாமை, சிறுநீர் வெளியேறுவது குறைதல், அதிதீவிர நிலையில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கண்தெரியாமை, தலையால் மோதிக் கொள்ளுதல், ஒருவித அமைதி நிலை போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
எனவே, கால்நடைகள் பொங்கல், பாயசம் மற்றும் பலகாரங்களை கால்நடைகள் உண்பதற்கு கொடுக்கக்கூடாது. ஒருவேளை பலகாரம், இனிப்புகளை கால்நடைகளுக்கு கொடுத்த பின் அவற்றின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment