Wednesday, January 14, 2015
தாராபுரம் அருகே இரு கிராமங்களை இணைக்கும் வகையில் அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட தமிழக அரசு ரூ.6.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம்- உடுமலை சாலையில் அமைந்துள்ளது கள்ளிவலசு கிராமம். இந்தக் கிராம மக்கள், சுற்றுவட்டார கிராமங்களான காங்கயம்பாளையம், செலாம்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அமராவதி ஆற்றின் அக்கரையில் உள்ள முருகன்வலசு கிராமத்துக்குச் செல்ல வேண்டுமெனில், தாராபுரம் வந்து அங்கிருந்து அலங்கியம் வழியாகத் தான் செல்ல முடியும்.
இதேபோல் காரத்தொழுவு வழியாக கணியூர், கடத்தூரை கடந்து முருகன்வலசுக்குச் செல்ல மற்றொரு வழி உண்டு.
இந்த இரு வழிகளில் எந்த வழியில் சென்றாலும் முருகன் வலசுக்குச் செல்ல குறைந்தபட்சம் 35 கி.மீ. தூரம் வரை பயணிக்க வேண்டும்.
அருகில், அருகில் உள்ள முருகன்வலசு, கள்ளிவலசுக்குச் செல்ல முடியாமல் இருகிராம மக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
இதனால், அமரவாதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என இருகிராம மக்களும் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட தமிழக அரசு, ரூ.6.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.தற்போது, ஆற்றின் குறுக்கே 150 மீட்டர் நீளத்தில், 12 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்படவுள்ளது. இதற்கான மண் பரிசோதனை நிறைவுற்று கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முருகன்வலசு, கள்ளிவலசு கிராம மக்கள் கூறியதாவது:
இரண்டு கிராம மக்களும் வருமானத்தின் பெரும் பகுதியை பேருந்திற்கே செலவிட்டு வந்தோம். செலவினம் கருதி ஆற்றில் நீந்தி அக்கரைக்குச் செல்ல முயன்ற 10-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பரிசல் மூலம் சென்று வந்தோம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பரிசலும் இயக்கப்படுவதில்லை. தற்போது பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது என்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் பாலம் கட்டுவதற்கான பணி துவங்கப்படவுள்ளது. இந்தப் பாலத்தின் மூலம் இரு கிராமங்கள், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 1 லட்சம் மக்கள் பயன்பெறுவர் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment