Monday, January 12, 2015
திருப்பூரில் காய்ச்சலுக்கு இரு குழந்தைகள் இறந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த ஆப்செட் தொழிலாளி மயில்சாமியின் இரண்டாவது மகள் பிருந்தா (2). காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதேபோல், சூர்யா காலனியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகள் சுபலட்சுமி (6) டிசம்பர் 27-ம் தேதி உயிரிழந்தார். இவ்விரு குழந்தைகளும் டெங்கு பாதிப்பால்தான் இறந்ததாக தகவல் பரவியதால், அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாநகர சுகாதார பிரிவு சார்பில் கடந்த இரு நாள்களாக அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த இரு நாள்களில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், யாருக்கும் இதுவரை டெங்கு பாதிப்பு அறிகுறி இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
இதற்கிடையே, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் கொசு மருந்துகள் தெளிப்பு, தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர் தூர்வாறும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. இப் பணிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ், ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட அவர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாநகர சுகாதார அலுவலர் செல்வக்குமார், மாமன்ற உறுப்பினர் முருகசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment