Monday, January 12, 2015
பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் பல்லடம் எம்.சி.திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் வி.காளியப்பன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சா.புருசோத்தமன், நகரச் செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விசைத்தறிகளுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள இலவச கல்வி முறையை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
முன்னதாக, மாவட்டத் தலைவர் மாதப்பூர் சாமிநாதன் வரவேற்றார். இதில் மாநில தேர்தல் பணிக் குழுத் தலைவர் சதாசிவம், மாநில துணை பொதுச் செயலாளர் அ.ரவிச்சந்திரன், மாநில நிர்வாகிகள் கி.மாதவன், மன்சூர், மாவட்ட நிர்வாகிகள் பொன்நடராசு கவுண்டர், கரிகாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment