Monday, January 05, 2015
நள்ளிரவு நேரத்தில் மர்மமான முறையில் திடீரென வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து உடுமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.
உடுமலை குமரன் நகரில் வசித்து வருபவர் பாலமுரளிகிருஷ்ணன் (37). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமாக வேன் உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பு, வேன்னை நிறுத்தி விட்டு பாலமுரளிகிருஷ்ணன் தூங்கச் சென்றாராம். நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென பலத்த சத்தம் கேட்டு, அவர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, வேன் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
அங்கு கூடிய அப்பகுதி மக்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்து போலீஸார் கூறியது:
வெடிச் சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். வேன் உரிமையாளர் பாலமுரளிகிருஷ்ணாவிற்கு அண்மைக்காலமாக ஒரு சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் வீட்டின் முன்பு உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமிராவில் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment