Monday, January 05, 2015
நள்ளிரவு நேரத்தில் மர்மமான முறையில் திடீரென வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து உடுமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.
உடுமலை குமரன் நகரில் வசித்து வருபவர் பாலமுரளிகிருஷ்ணன் (37). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமாக வேன் உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பு, வேன்னை நிறுத்தி விட்டு பாலமுரளிகிருஷ்ணன் தூங்கச் சென்றாராம். நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென பலத்த சத்தம் கேட்டு, அவர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, வேன் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
அங்கு கூடிய அப்பகுதி மக்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்து போலீஸார் கூறியது:
வெடிச் சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். வேன் உரிமையாளர் பாலமுரளிகிருஷ்ணாவிற்கு அண்மைக்காலமாக ஒரு சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் வீட்டின் முன்பு உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமிராவில் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment