Monday, January 05, 2015
விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தது தொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் பெட்ரோல் பங்க் தொழிலாளி அஜீத்குமார்(17). அவர், புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பொங்கலூர் சாலை, கள்ளிமேடு என்ற இடத்தில் நிலைதடுமாறிக் கீழே விழுந்து காயமடைந்தார். அவர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், வழியிலேயே அவரது உடல் பலகீனமடைந்திருப்பதாகக் கூறி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள், திருப்பூர் பாண்டியன் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு, அஜித்குமார் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மருத்துவமனை நிர்வாகம், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அஜித்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, அவரது உறவினர்கள் மருத்துமனையை முற்றுகையிட்டனர். அதன்பின், சனிக்கிழமை அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், அஜித்குமாரின் தாய் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் நிர்வாகி மலர்மன்னன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பன்னீர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment