Monday, January 05, 2015
விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தது தொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் பெட்ரோல் பங்க் தொழிலாளி அஜீத்குமார்(17). அவர், புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பொங்கலூர் சாலை, கள்ளிமேடு என்ற இடத்தில் நிலைதடுமாறிக் கீழே விழுந்து காயமடைந்தார். அவர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், வழியிலேயே அவரது உடல் பலகீனமடைந்திருப்பதாகக் கூறி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள், திருப்பூர் பாண்டியன் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு, அஜித்குமார் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மருத்துவமனை நிர்வாகம், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அஜித்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, அவரது உறவினர்கள் மருத்துமனையை முற்றுகையிட்டனர். அதன்பின், சனிக்கிழமை அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், அஜித்குமாரின் தாய் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் நிர்வாகி மலர்மன்னன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பன்னீர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment