Monday, January 05, 2015
மிலாது நபி நாளில் செயல்பட்ட, பெருமாநல்லூர் டாஸ்மாக் பாரில் போலீஸார் அதிரடி சோதனையிட்டு 1,647 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, 5 ஊழியர்களை கைது செய்தனர்.
மிலாது நபியையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு, மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெருமநல்லூர் நான்கு சாலை சந்திப்பு, குன்னத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை(எண்.2313) பாரில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் உத்தரவின் போõல், அவிநாசி துணை கண்காணிப்பாளர் ராமசாமி, மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் விஜயநாச்சியார் ஆகியோர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள்
ஞானரவி, தங்கவேல், சிவகாமிராணி (மது விலக்கு), உதவி ஆய்வாளர் ரங்கநாதன்,
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்ரா ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த டாஸ்மாக் கடை பாரில் அதிரடி சோதனையிட்டனர்.
அங்கு, வைக்கப்பட்டிருந்த 1,647 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விடுமுறை தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்ததாக, பார் ஊழியர்களான சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் குமார் (24), சரவணன் (24), அஜித் (23), சிவராஜ் (26), பாலா (23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, டாஸ்மாக் பார் உரிமையாளர் மணிகண்டன், பணியாளர் சுப்பிரமணி, பொறுப்பாளர் கண்ணப்பன் ஆகியோரை அவிநாசி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment