Monday, January 05, 2015
மிலாது நபி நாளில் செயல்பட்ட, பெருமாநல்லூர் டாஸ்மாக் பாரில் போலீஸார் அதிரடி சோதனையிட்டு 1,647 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, 5 ஊழியர்களை கைது செய்தனர்.
மிலாது நபியையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு, மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெருமநல்லூர் நான்கு சாலை சந்திப்பு, குன்னத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை(எண்.2313) பாரில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் உத்தரவின் போõல், அவிநாசி துணை கண்காணிப்பாளர் ராமசாமி, மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் விஜயநாச்சியார் ஆகியோர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள்
ஞானரவி, தங்கவேல், சிவகாமிராணி (மது விலக்கு), உதவி ஆய்வாளர் ரங்கநாதன்,
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்ரா ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த டாஸ்மாக் கடை பாரில் அதிரடி சோதனையிட்டனர்.
அங்கு, வைக்கப்பட்டிருந்த 1,647 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விடுமுறை தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்ததாக, பார் ஊழியர்களான சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் குமார் (24), சரவணன் (24), அஜித் (23), சிவராஜ் (26), பாலா (23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, டாஸ்மாக் பார் உரிமையாளர் மணிகண்டன், பணியாளர் சுப்பிரமணி, பொறுப்பாளர் கண்ணப்பன் ஆகியோரை அவிநாசி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment