Monday, January 05, 2015
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 225 பேருக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.
இக்கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. இதற்கு, கல்லூரி முதல்வர் ரேச்சல்நான்சி பிலிப் தலைமை வகித்தார். இதில், சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி மென்பொருள் நிறுவனங்கள், பிபிஓ மையங்கள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் உள்பட 21 நிறுவனங்கள் பங்கேற்றன. திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலுள்ள 25 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,500 மாணவ, மாணவிகள் வேலை வாய்ப்புப் பெற இம்முகாமில் பங்கேற்றனர். இதில், சனிக்கிழமை 155 பேரும், ஞாயிற்றுக்கிழமை 70 பேரும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. தவிர, 30 பேர் நேர்காணலுக்காக நிறுவனங்களுக்கு நேரடியாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment