Wednesday, January 07, 2015
திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதி, உதவித்தொகை, ரேஷன் கார்டு, கல்விக்கடன் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுத்தனர்.
திருப்பூர் நல்லூர் காசிபாளையம் பகுதி பெண்கள் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் கொடுத்த மனுவில், சிட்கோ செல்லும் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து கழிவுநீர் முழுவதும் சிட்கோ செல்லும் சாலை திறந்து விடப்படுகிறது. இந்த கழிவுநீர் அந்த சாலை வழியாக ஓடி அருகில் உள்ள பாப்பன்காடு காலனி மற்றும் பள்ளக்காட்டு காலனியில் வசிக்கும் மக்கள் குடிநீர் பயன்பாட்டுக்காக எடுக்கப்படும் கிணற்றின் கரையில் தேங்கி நிற்கிறது. இதனால் கிணற்றில் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
திருப்பூர் அணைப்பாளையத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கொடுத்த மனுவில், அணைப்பாளையம் பகுதியில் நாய்யல் ஆற்றின் குறுக்கே கிடப்பில் கிடக்கும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் கரடுமுரடாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
திருப்பூர் மாவட்ட சிவசேனா அமைப்பினர் கொடுத்த மனுவில், திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் தேவாங்கபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முகப்பு வாசல் முன்பகுதியில் வழித்தடத்தை மறைத்து ரெயில்வே துறையினர் சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். அதே நேரம் கோவிலின் அருகில் உள்ள தனியார் ஓட்டல் நிர்வாகத்தினர் ரெயில்வே அதிகாரிகள் அனுமதியுடன் அந்த சுற்றுச்சுவரை இடித்து வழித்தடம் ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் கோவிலுக்கு வழித்தடம் விட மறுக்கிறது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அந்த தடுப்பு சுவரை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தினர் கொடுத்த மனுவில், திருப்பூர் மாநகரில் உள்ள ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். எனவே இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், அரசு அறிவித்துள்ள இலவச பொருட்கள் மக்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், ஆயிரத்துக்கும் அதிகமான கார்டுகள் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு 500 முதல் 700 இலவச வேட்டி–சேலைகள் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றும் புகார் கூறியிருந்தனர்.
ஆம்ஆத்மி கட்சியினர் கொடுத்த புகார் மனுவில் தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவகத்தில் சான்றிதழ், கையொப்பம் போன்றவை வாங்க லஞ்சம் வாங்குவதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்து மக்கள் கட்சி–(தமிழகம்) கொடுத்த மனுவில், பகவத்கீதை, திருக்குறள் ஆகியவற்றை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். ஏழை அய்யப்ப பக்தர்களுக்கு பஸ், ரெயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும், சபரிமலையில் தமிழக அரசு சார்பில் தங்கும் மடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். அதுபோல் பாரத் மக்கள் கட்சி கொடுத்த மனுவில், சாலையோரங்களில் உள்ள மரங்களில் ஆணி அடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் இதனால் அதன் ஆயுட்காலம் குறைகிறது என்றும் கூறியிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment