Tuesday, January 06, 2015

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கிண்ணிமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட கி.மீனாட்சிபட்டி, வடபழஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் காலி குடங்களுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிண்ணி மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கி.மீனாட்சிபட்டி, வடபழஞ்சி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சரிவர குடிநீர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், பஞ்சாயத்து தலைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடிநீர் கிடைக்காததால் கடும் அவதி அடைந்து வருகிறோம். நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கிடைக்கும் தண்ணீரும் சுத்தமானதாக இல்லை. இதனால் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே இதுதொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கல் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment