Tuesday, January 06, 2015
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கிண்ணிமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட கி.மீனாட்சிபட்டி, வடபழஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் காலி குடங்களுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிண்ணி மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கி.மீனாட்சிபட்டி, வடபழஞ்சி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சரிவர குடிநீர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், பஞ்சாயத்து தலைவரிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடிநீர் கிடைக்காததால் கடும் அவதி அடைந்து வருகிறோம். நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கிடைக்கும் தண்ணீரும் சுத்தமானதாக இல்லை. இதனால் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே இதுதொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கல் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment