Saturday, March 28, 2015

On Saturday, March 28, 2015 by Unknown in ,    
திருப்பூர், : திருப்பூர் மாநகர இளைஞர் அணி சார்பில் 1,630 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.திருப்பூர் மாநகர தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் பாளையக்காடு மெயின் ரோட்டில் நடந்தது.கூட்டத்துக்கு மாநகர இளைஞர் அணி அமைப் பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், சிராஜ்தீன், ஆனந்த், சரவணகுமார், பகுதி செயலாளர் உசேன், கவுன்சிலர் செங்கப்பள்ளி சுப்ரமணியம், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், பகுதி அவைத்தலைவர் கணேஷ் அர்ஜூன், 32வது வட்ட செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, தீர்மானக்குழு செயலாளர் குழந்தை தமிழரசன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாக ராஜ் ஆகியோர் பேசினர். மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி 1,630 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

கூட்டத்தில் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் சோமசுந்தரம், சரஸ்வதி பால்ராஜ், பொருளாளர் சேகர், ரத்தினசாமி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநகர துணை செயலாளர்கள் சிட்டி கணேசன், வேலுச்சாமி, சுகன்யா லோகு, மாநகர பொருளாளர் கார்த்திகேயன், மாநில தொழிற்சங்க அமைப்பு துணை செயலாளர் மலர் மரகதம் மற்றும் கட்சியின் மாநகர இளைஞர் அணி, மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

0 comments: