Monday, March 09, 2015
ஊதியூர் அருகே பஸ்நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுவந்த 2தனியார் பஸ்களை பயணிகள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் ஊதியூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வஞ்சிபாளையம் பிரிவில் நிழலி, கவுண்டம்பாளையம், செட்டிபாளையம், பங்காம்பாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பனியன் கம்பெனி தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோர் பஸ்ஏறி திருப்பூர், தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த வழியாக இயக்கப்படும் 2தனியார் பஸ்கள் வஞ்சிபாளையம் பஸ்நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்காமல் செல்வதாகக் கூறி நேற்று காலை 10.30மணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த 100பேர் 2தனியார் பஸ்களையும் சிறைப்பிடித்தனர்.
இதில் ஒரு தனியார் பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்து எனது பஸ் ரோட்டில் ஓடவில்லையென்றால் வேறு எந்த பஸ்சும் ஓடவிடமாட்டேன் என்று கூறி பஸ்சை ரோட்டின் குறுக்காக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து பொதுமக்களே வேறு வழியை ஏற்படுத்தி மற்ற வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.
தகவலறிந்த ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேசி சமாதானம் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பஸ்கம்பெனி நிர்வாகிகளுடன் பேசி இனி முறையாக பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பஸ்களை 12.30மணிக்கு விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2மணி நேரம் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறும்போது கடந்த 2வருடத்திற்கு முன்பு இதேபோல பஸ்களை நிறுத்தாமல் சென்றதைத் தொடர்ந்து நாங்கள் சாலைமறியல் செய்வதாக அறிவித்தோம். உடனே காங்கயம் தாசில்தார் எங்களையும் பஸ்கம்பெனி நிர்வாகிகளையும் அழைத்து முறையாக நின்று செல்ல அறிவுறுத்தினார். அதையடுத்து கடந்த 1வருடமாக நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் சென்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக மீண்டும் நிற்காமல் செல்லத் தொடங்கிவிட்டனர். இதனாலேயே பஸ்சை சிறைப்பிடிக்கவேண்டியதாயிற்று என்றனர்.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் ஊதியூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வஞ்சிபாளையம் பிரிவில் நிழலி, கவுண்டம்பாளையம், செட்டிபாளையம், பங்காம்பாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பனியன் கம்பெனி தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோர் பஸ்ஏறி திருப்பூர், தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த வழியாக இயக்கப்படும் 2தனியார் பஸ்கள் வஞ்சிபாளையம் பஸ்நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்காமல் செல்வதாகக் கூறி நேற்று காலை 10.30மணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த 100பேர் 2தனியார் பஸ்களையும் சிறைப்பிடித்தனர்.
இதில் ஒரு தனியார் பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்து எனது பஸ் ரோட்டில் ஓடவில்லையென்றால் வேறு எந்த பஸ்சும் ஓடவிடமாட்டேன் என்று கூறி பஸ்சை ரோட்டின் குறுக்காக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து பொதுமக்களே வேறு வழியை ஏற்படுத்தி மற்ற வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.
தகவலறிந்த ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேசி சமாதானம் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பஸ்கம்பெனி நிர்வாகிகளுடன் பேசி இனி முறையாக பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பஸ்களை 12.30மணிக்கு விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2மணி நேரம் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறும்போது கடந்த 2வருடத்திற்கு முன்பு இதேபோல பஸ்களை நிறுத்தாமல் சென்றதைத் தொடர்ந்து நாங்கள் சாலைமறியல் செய்வதாக அறிவித்தோம். உடனே காங்கயம் தாசில்தார் எங்களையும் பஸ்கம்பெனி நிர்வாகிகளையும் அழைத்து முறையாக நின்று செல்ல அறிவுறுத்தினார். அதையடுத்து கடந்த 1வருடமாக நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் சென்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக மீண்டும் நிற்காமல் செல்லத் தொடங்கிவிட்டனர். இதனாலேயே பஸ்சை சிறைப்பிடிக்கவேண்டியதாயிற்று என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment