Saturday, March 07, 2015
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று தொடங்கிவைத்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 கோடி மானியமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 கோடியே 58 லட்சத்துக்கு 60 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுபோல் இயக்குதலும் பராமரிப்பு இடைவெளி நிரப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் கட்ட ரூ.7 கோடி மானியம் ஒதுக்கப்பட்டதில் ரூ.7 கோடியே 31 லட்சம் மதிப்பில் 24 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் கட்ட ரூ.9 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன்மூலம் ரூ.9 கோடியே 69 லட்சம் மதிப்பில் 10 இடங்களில் பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதுதவிர நகர் மற்றும் ஊரமைப்பு துறை மூலம் உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்பில் குமார்நகர்– அவினாசி ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– புஷ்பாதியேட்டர் சந்திப்பு, ராக்கியாபாளையம் பிரிவு– காங்கயம் ரோடு சந்திப்பு, மாநகராட்சி அலுவலக சாலை– மங்கலம் ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு– காங்கயம் ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– டவுன்ஹால் சந்திப்பு ஆகிய 6 இடங்களில் உயர்மட்ட நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
திருப்பூர் மாநகராட்சிக்கு தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 கோடி மானியமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 கோடியே 58 லட்சத்துக்கு 60 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுபோல் இயக்குதலும் பராமரிப்பு இடைவெளி நிரப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் கட்ட ரூ.7 கோடி மானியம் ஒதுக்கப்பட்டதில் ரூ.7 கோடியே 31 லட்சம் மதிப்பில் 24 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் கட்ட ரூ.9 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன்மூலம் ரூ.9 கோடியே 69 லட்சம் மதிப்பில் 10 இடங்களில் பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதுதவிர நகர் மற்றும் ஊரமைப்பு துறை மூலம் உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்பில் குமார்நகர்– அவினாசி ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– புஷ்பாதியேட்டர் சந்திப்பு, ராக்கியாபாளையம் பிரிவு– காங்கயம் ரோடு சந்திப்பு, மாநகராட்சி அலுவலக சாலை– மங்கலம் ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு– காங்கயம் ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– டவுன்ஹால் சந்திப்பு ஆகிய 6 இடங்களில் உயர்மட்ட நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
அதன்படி மொத்தம் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று மாநகரின் பல்வேறு இடங்களில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மேயர் விசாலாட்சி, துணைமேயர் குணசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அசோகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பூமிபூஜைகளை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சிகளில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கவுன்சிலர்கள் முருகசாமி, கீதா ஆறுமுகம், பி.கே.முத்து, விஜயகுமார், சண்முகசுந்தரம், கேபிள்சிவா, ஆனந்தன், மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர்கள் தமிழ்செல்வன், திருமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...

0 comments:
Post a Comment